எந்த அடிப்படையில் மதிப்பெண்.!?5-8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

Published by
kavitha
  • தமிழகம் முழுவதும் 5,8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடப்பாண்டு முதல் நடைபெறுகிறது.
  • மாணவர்களுக்கு 60 மதிப்பெண்களுக்குத்தான் எழுத்து தேர்வு நடக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் 5, 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 60 மதிப்பெண் அடிப்படையில் தான் எழுத்து தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து பள்ளித்துறை ஆணையர் சிஜிதாமஸ் வெளியிட்ட அறிக்கையில்  தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறைகளானது கடந்த 2012-13ம் ஆண்டு முதல் நடைமுறையில்  உள்ள முறைகளின் கீழ் வளரறி (Formative Assessment) மதிப்பீட்டுக்கு 40 மதிப்பெண் மற்றும் தொகுத்தறி (Summative Assessment) மதிப்பீட்டுக்கு 60 மதிப்பெண் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த மதிப்பெண் முறைகளில் வளரறி மதிப்பீடு என்பது FA+FB என இரண்டு வகைகளில் மதிப்பீடு செய்யப்படுகின்றது. FA வில் புராஜெக்ட் மற்றும் மாதிரிகள் வடிவமைத்தல், செயல்பாடுகள் ஆகியவைகளுக்கு பள்ளி பாட ஆசிரியர்களால் மதிப்பீடு செய்யப்பட்டு அதற்கு 20 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு வருகிறது.அதே போல்FBயின் அடிப்படையில் ஒவ்வொரு பாடத்திலும் சிறு தேர்வுகள் நடத்தி மதிப்பீடு செய்யப்பட்டு அவற்றுக்கு 20 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு வருகிறது.

தொகுத்தறி மதிப்பில் நடத்தப்படும் பாடப்பகுதியில் இருந்து கேள்வித்தாள் தயாரித்து பள்ளி  அல்லது வட்டார மற்றும் மாவட்ட அளவில் கேள்வித்தாள் தயாரித்து  60 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடத்தி மதிப்பெண்கள் வழங்கப்பட்டு  வருகிறது.

இந்நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 5, 8ம் வகுப்புகளுக்கான ஆண்டு இறுதி பொதுத் தேர்வின்போது கடந்த 22.10.2019ம் தேதியில் அறிவித்தபடி FA, FBல் வழங்கப்பட்ட 40 மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். தொகுத்தறிவு முறையின் கீழ் வழங்கப்பட உள்ள 60 மதிப்பெண்களுக்கான தேர்வுக்குரிய கேள்வித்தாள்கள் அரசுத் தேர்வுத்துறையால் தயாரிக்கப்படும்

அவ்வாறு தயாரிக்கப்பட்ட கேள்வித்தாள்கள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேர்வுகளின் விடைத்தாள்கள் அந்தந்த சிஆர்சி மைய அளவில் மாற்றி அனுப்பி அதில் திருத்தம் செய்து மதிப்பெண் பட்டியல்கள் அனைத்தும் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்த அவர் மேலும், 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வில் முதல் 3 ஆண்டுகளுக்கு மாணவர்களின் தேர்ச்சியை நிறுத்தி வைக்க கூடாது என்று அரசு ஆணையிட்டு உள்ளது. இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் அச்சப்படத் தேவையில்லை என்று பள்ளித்துறை ஆணையர் சிஜிதாமஸ் தான் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

Recent Posts

Live : டெல்லி அரசியல் நிலவரம் முதல்., உள்ளூர் அரசியல் நிகழ்வுகள் வரை…

Live : டெல்லி அரசியல் நிலவரம் முதல்., உள்ளூர் அரசியல் நிகழ்வுகள் வரை…

சென்னை : டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், நேற்று (பிப்ரவரி…

29 minutes ago

“தவெக-வில் பதவிக்கு காசு வாங்குறாங்க., ஆதாரம் இருக்கு” முன்னாள் பிரமுகர் பகீர் பேட்டி!

திருவண்ணாமலை : தமிழகம் வெற்றிக் கழகம் கட்சி ஆரம்பித்து தற்போது வரையில் அக்கட்சி நிர்வாகத்திற்கு 120 மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்…

1 hour ago

IND v ENG : இங்கிலாந்தை சுருட்ட களமிறங்கும் வருண் சக்கரவர்த்தி! சம்பவம் லோடிங்..

ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…

16 hours ago

“10 படம் தோல்வி ஆகும்னு நினைக்கல”.. வேதனைப்பட்ட இயக்குநர் சுசீந்திரன்!

சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…

16 hours ago

27 ஆண்டுகளுக்கு பிறகு இமாலய சாதனை படைத்த பாஜக! வெற்றி கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக  சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…

18 hours ago

INDvENG : 2வது ஒருநாள் போட்டி எப்படி இருக்கும்? பிட்ச் நிலை, வானிலை நிலவரம், வீரர்கள் விவரம் இதோ..,

கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…

18 hours ago