சென்னையில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.ஜூன் 23-ல் அதிமுகவின் செயற்குழு,பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.இந்த கூட்டத்தில் அதிமுக பொதுக்குழுவில் எடுக்க வேண்டிய முக்கிய முடிவுகள் மற்றும் தீர்மானங்கள் தொடர்பாக ஆலோசித்து வருவதாக கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து,வரும் 23-ஆம் தேதி நடக்கும் கூட்டத்திற்காக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை தர அதிமுக முடிவு செய்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது.தேவையில்லாத பிரச்சனைகளை தடுக்க புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க அதிமுக திட்டமிட்டுள்ளது.மேலும், சிறப்பு அழைப்பாளர்களுக்கு செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு இல்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில்,அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என ராயப்பேட்டை தலைமை அலுவலகத்திற்கு வெளியே அக்கட்சி தொண்டர்கள் சிலர் முழக்கம் எழுப்பி வருகின்றனர்.அதன்படி,ஒற்றைத் தலைமை வேண்டும் என ஒரு தரப்பினரும்,ஒற்றைத் தலைமை வந்தால் ஓபிஎஸ் தான் வர வேண்டும் என கூறி மற்றொரு தரப்பினரும் முழக்கமிட்டு வருவதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…