தமிழகத்தில் மேலும் 52 பேருக்கு கொரோனா.! ஒரே நாளில் 81 பேர் குணம்.!

Default Image

தமிழகத்தில் இன்று மேலும் 52 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 52 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,885 ஆக இருந்த நிலையில், தற்போது 1,937 ஆக உயர்ந்துள்ளது. இதில் இன்று மட்டும் சென்னையில் 47 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதித்தவர்களின் எண்ணிக்கை 570 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அதுமட்டுமில்லாமல் இன்று ஒரே நாளில் 81 பேர் கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்த நிலையில், மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,020 லிருந்து 1,101 ஆக உயர்ந்துள்ளது.

இதையடுத்து வீட்டு கண்காணிப்பில் 29,797 பேர் உள்ளனர் என்றும் அரசு கண்காணிப்பில் 36 பேர் இருக்கின்றார்கள் எனவும் தெரிவித்துள்ளனர். இன்று மட்டும் 6,753 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 86,339 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதில் 1,937 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வார்டில் 809 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்கள் என்றும் கூறியுள்ளனர். இதனிடையே பலி எண்ணிக்கை 24 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்