#Breaking:தேர் விபத்து:உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் -முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

Published by
Edison

தஞ்சாவூரை அடுத்துள்ள களிமேடு அப்பர் கோயிலில் நடைபெற்ற 94-வது ஆண்டு சித்திரை தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்ததில் இரண்டு சிறுவர்கள் உட்பட மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.பொதுவாக களிமேடு அப்பர் கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி அதிகாலை நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில்,நேற்று நள்ளிரவு நடைபெற்ற களிமேடு தேர் திருவிழாவில் தஞ்சை பூதலூர் சாலையில் களிமேடு பகுதியில் தேர் வரும்போது உயர் மின் அழுத்த கம்பி மீது தேர் உரசியதால் மின்சாரம் பாய்ந்து 11 பேர் உயிழந்துள்ளதனர்,15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதில்,ஒருவர் மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும்,தேரை சுற்றி தண்ணீர் இருந்ததன் காரணமாக மக்கள் பலர் தள்ளி நின்றதால் பெரும் உயிரிழப்பு சேதம் தவிர்ப்பு என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து,விபத்துக்கான காரணம் குறித்து அறிய விபத்து ஏற்பட்ட பகுதியை மாவட்ட ஆட்சியர்,காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்து வருகிறார்கள்.

இந்நிலையில்,களிமேடு தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் வழங்குவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.மேலும்,விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே,தஞ்சை களிமேடு தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நேரில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி,இன்று காலை 11.30 மணிக்கு சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி சென்று அங்கிருந்து முதல்வர் தஞ்சை சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தார்களுக்கு ஆறுதல் சொல்ல உள்ளார் எனவும்,விபத்து நடந்த பகுதியை பார்வையிட உள்ளார் எனவும் கூறப்படுகிறது.

அதே சமயம்,தேர் விபத்து தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இன்று அனைத்து கட்சி சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளதாகவும்,இதற்கு அமைச்சர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதில் அளிப்பார் எனவும் தகவல் வெளியாகிள்ளது.

Recent Posts

ராஜினாமா செய்ய தயாரா? பாஜகவுக்கு சவால் விட்ட செல்வப்பெருந்தகை!

ராஜினாமா செய்ய தயாரா? பாஜகவுக்கு சவால் விட்ட செல்வப்பெருந்தகை!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூடிய நிலையில், காவல்துறை மானியக் கோரிக்கை குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில்…

6 minutes ago

7ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் முகலாயர் பாடங்கள் நீக்கம்.., கும்பமேளா சேர்ப்பு?

டெல்லி : தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு நடத்தும் பள்ளிகளிலும், தேசிய கல்வி கொள்கையை பின்பற்றும் தனியார் பள்ளிகளும்…

1 hour ago

“தமிழ்நாட்டில் எந்த விதத்திலும் மதவாதம் நுழைய முடியாது” – முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்.!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய 9 அறிவிப்புகளை அறிவித்தார்.…

2 hours ago

காஷ்மீர் தாக்குதல் : பிபிசி தொலைக்காட்சி மீது மத்திய அரசு அதிருப்தி.!

டெல்லி : கடந்த வாரம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டதற்காக…

2 hours ago

தமிழ்நாடு போலீசுக்கு நாங்க என்னென்ன செய்திருக்கோம் தெரியுமா? முதலமைச்சர் போட்ட பட்டியல்…

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறை மானியம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அரசு…

2 hours ago

அடிக்குற வெயிலுக்கு மழை அப்டேட்.! இந்த 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.!

சென்னை : தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து கடும் வெப்பம் கொளுத்தி வருகிறது. இந்த வேளையில், சில இடங்களில்…

3 hours ago