505 பொய் வாக்குறுதிகளை கூறி திமுக ஆட்சி அமைத்துள்ளது – ஓபிஎஸ்

Default Image

505 பொய் வாக்குறுதிகளை கூறி திமுக ஆட்சி அமைத்துள்ளது.

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது. இதனையடுத்து, அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்கள் ராணிப்பேட்டையில், அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், மிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்துள்ளது; கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது, 505 பொய் வாக்குறுதிகளை கூறி திமுக ஆட்சி அமைத்துள்ளது. வேட்பாளர்களின் முகத்தில் வெற்றிப் புன்னகை தெரிவதால் அதிமுக 100க்கு 100 மகத்தான வெற்றி பெறும். அதிமுகவின் வெற்றி வாய்ப்பை தடுக்கும் சக்தி தமிழகத்தில் எந்த கட்சிக்கும் இல்லை என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்