ஏழைகளுக்கு 5000 ரூபாய் உதவித்தொகை வழங்க வேண்டும் – மு.க ஸ்டாலின்

Published by
பாலா கலியமூர்த்தி

ஏழை மக்களுக்கு ரூ.5000 உதவித்தொகை வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் மேலும் 2 வாரத்திற்கு அதாவது மே 17 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டு, அதற்கான வழிகாட்டி நெறிமுறை கட்டுப்பாடுகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதனிடையே தமிழக அரசு ஊரடங்கை மதித்து நடக்கும் மக்களுக்கு உதவ வேண்டும் என்றும் அனைவர்க்கும் ரூ.5,000 நிவாரணம் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் குறை சொல்ல முடியாத அரசாக இருக்க வேண்டும் என விரும்புவதால் சொல்கிறேன் என முக ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கையுடன் சேர்த்து பதிவிட்டுள்ளார். அதில், ஏழை மக்களுக்கு ரூ.5000 உதவித் தொகையும்,கொரோனா தடுப்பில் களப்பணியாற்றும் அனைத்துத் துறையினருக்கும் சிறப்பு ஊதியமும் வழங்கிட வேண்டும் என தெரிவித்துள்ளார். கொரோனா பேரழிவிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் அரசின் கட்டுப்பாடுகளை மக்கள் முழுமையாக பின்பற்றி நடக்க வேண்டும் என்றும் மக்களின் தேவைகளை அரசு நிறைவேற்றிட வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் ஊரடங்கை மதித்து வீட்டுக்குள் இருப்பது மக்களின் கடமை, அவர்களைக் காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை என்று குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசு அறிவித்த கொரோனா நிவாரணம் உதவிகள் போதாது என்று தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

எங்கும் பாலியல் கறைகள்! ‘கவலையின்றி அல்வாசாப்பிட்டு கொண்டிருக்கிறார் முதல்வர்’ – சீமான் ஆவேசம்!

எங்கும் பாலியல் கறைகள்! ‘கவலையின்றி அல்வாசாப்பிட்டு கொண்டிருக்கிறார் முதல்வர்’ – சீமான் ஆவேசம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…

8 hours ago

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்தியா! வீரர்களுக்கு பிசிசிஐ கொடுத்த கிஃப்ட்!

டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…

9 hours ago

மேலும் 487 இந்தியர்களை நாடுகடத்த அமெரிக்கா திட்டம்! விக்ரம் மிஸ்ரி சொன்ன தகவல்!

அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக  104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…

9 hours ago

அடிமேல் அடி…லைக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த விடாமுயற்சி! முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…

10 hours ago

இத்தனை நாளு எங்கய்யா இருந்த? ஸ்ரேயாஸ் ஐயரை புகழ்ந்து தள்ளிய ரிக்கி பாண்டிங்!

மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …

11 hours ago

கந்தூரி விழா : காரைக்கால் மாவட்டத்திற்கு நாளை (08.02.2025) உள்ளூர் விடுமுறை!

புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை  என மாவட்ட புதுச்சேரி…

12 hours ago