ஏழைகளுக்கு 5000 ரூபாய் உதவித்தொகை வழங்க வேண்டும் – மு.க ஸ்டாலின்

Published by
பாலா கலியமூர்த்தி

ஏழை மக்களுக்கு ரூ.5000 உதவித்தொகை வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் மேலும் 2 வாரத்திற்கு அதாவது மே 17 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டு, அதற்கான வழிகாட்டி நெறிமுறை கட்டுப்பாடுகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதனிடையே தமிழக அரசு ஊரடங்கை மதித்து நடக்கும் மக்களுக்கு உதவ வேண்டும் என்றும் அனைவர்க்கும் ரூ.5,000 நிவாரணம் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் குறை சொல்ல முடியாத அரசாக இருக்க வேண்டும் என விரும்புவதால் சொல்கிறேன் என முக ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கையுடன் சேர்த்து பதிவிட்டுள்ளார். அதில், ஏழை மக்களுக்கு ரூ.5000 உதவித் தொகையும்,கொரோனா தடுப்பில் களப்பணியாற்றும் அனைத்துத் துறையினருக்கும் சிறப்பு ஊதியமும் வழங்கிட வேண்டும் என தெரிவித்துள்ளார். கொரோனா பேரழிவிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் அரசின் கட்டுப்பாடுகளை மக்கள் முழுமையாக பின்பற்றி நடக்க வேண்டும் என்றும் மக்களின் தேவைகளை அரசு நிறைவேற்றிட வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் ஊரடங்கை மதித்து வீட்டுக்குள் இருப்பது மக்களின் கடமை, அவர்களைக் காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை என்று குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசு அறிவித்த கொரோனா நிவாரணம் உதவிகள் போதாது என்று தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

54 mins ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

13 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

19 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

19 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

19 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

19 hours ago