ஏழைகளுக்கு 5000 ரூபாய் உதவித்தொகை வழங்க வேண்டும் – மு.க ஸ்டாலின்

Published by
பாலா கலியமூர்த்தி

ஏழை மக்களுக்கு ரூ.5000 உதவித்தொகை வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் மேலும் 2 வாரத்திற்கு அதாவது மே 17 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டு, அதற்கான வழிகாட்டி நெறிமுறை கட்டுப்பாடுகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதனிடையே தமிழக அரசு ஊரடங்கை மதித்து நடக்கும் மக்களுக்கு உதவ வேண்டும் என்றும் அனைவர்க்கும் ரூ.5,000 நிவாரணம் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் குறை சொல்ல முடியாத அரசாக இருக்க வேண்டும் என விரும்புவதால் சொல்கிறேன் என முக ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கையுடன் சேர்த்து பதிவிட்டுள்ளார். அதில், ஏழை மக்களுக்கு ரூ.5000 உதவித் தொகையும்,கொரோனா தடுப்பில் களப்பணியாற்றும் அனைத்துத் துறையினருக்கும் சிறப்பு ஊதியமும் வழங்கிட வேண்டும் என தெரிவித்துள்ளார். கொரோனா பேரழிவிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் அரசின் கட்டுப்பாடுகளை மக்கள் முழுமையாக பின்பற்றி நடக்க வேண்டும் என்றும் மக்களின் தேவைகளை அரசு நிறைவேற்றிட வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் ஊரடங்கை மதித்து வீட்டுக்குள் இருப்பது மக்களின் கடமை, அவர்களைக் காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை என்று குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசு அறிவித்த கொரோனா நிவாரணம் உதவிகள் போதாது என்று தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ஒரு மணிநேரம் மட்டும்., மீண்டும் திறக்கப்பட்ட திரௌபதி அம்மன் கோயில்! பட்டியலின மக்கள் மகிழ்ச்சியுடன் சாமி தரிசனம்!

ஒரு மணிநேரம் மட்டும்., மீண்டும் திறக்கப்பட்ட திரௌபதி அம்மன் கோயில்! பட்டியலின மக்கள் மகிழ்ச்சியுடன் சாமி தரிசனம்!

விழுப்புரம் : சாதிய பாகுபாடு , அதனால் ஏற்பட்ட இருதரப்பு மோதல் காரணமாக 22 மாதங்களாக மூடி இருந்த திரௌபதி…

49 minutes ago

அமித்ஷா vs எடப்பாடி பழனிச்சாமி! 2026-ல் கூட்டணி ஆட்சியா? என்ன சொன்னார்கள்?

சென்னை : தமிழ்நாட்டில் பிரதான கட்சிகள் (அதிமுக, திமுக) கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து இருந்தாலும் , தேர்தல் முடிந்த…

1 hour ago

ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!

டெல்லி : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…

2 hours ago

பரபரப்பாக மேட்ச்.., சூப்பர் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற டெல்லி.!

டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…

9 hours ago

நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!

நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…

10 hours ago

மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!

டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…

12 hours ago