தற்போது உலக நாடுகள் அனைத்தும் எதிர்க்கொள்ளும் மிக பெரிய பிரச்னைகளில் ஒன்று சுற்று சூழல் பாதிப்பு. நாம் அனைவரும் பயன்படுத்தும் வாகனத்தில் இருந்து வரும் புகை மற்றும் நாம் எரிக்க கூடிய பிளாஸ்டிக் பொருள்களில் இருந்து வரும் புகைகளே இதற்கு காரணம் .தற்போது உலக நாடுகள் அனைத்தும் வாகனத்தில் இருந்து வரும் புகையை குறைப்பதற்கு மாற்று எரிசக்தி குறித்து சிந்தித்து வருகிறது.
இந்நிலையில் பெட்ரோல் ,டீசல் வாகனங்களுக்கு பதிலாக மின்சார ஆற்றலில் இயங்கும் வாகனங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் பெட்ரோல் ,டீசல் வாகனங்களுக்கு பதிலீடு செய்யும் அளவிற்கு மின்சார ஆற்றலில் இயங்கும் வாகனங்கள் பயன்பாடு இன்னும் உருவாகி வரவில்லை.
காரணம் எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டு உட்கட்டமைப்பு பெரிதளவில் இன்னும் உருவாகவில்லை ஆனால் அதற்கான வேலைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது அந்த வேலையில் ஈடுபட்டு உள்ள நிறுவனங்களில் ஏதர் எனர்ஜி நிறுவனமும் ஓன்று.
பெங்களூரை தலைமை இடமாக கொண்டு 2013-ம் ஆண்டு இந்நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் மின்சார இருசக்கர வாகனம் தயாரிக்கும் நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் மின்சார வாகனகளுக்கு தேவையான சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இதுவரை 31 சார்ஜிங் நிலையங்களை அமைத்து இயக்கி வருகிறது. அதில் பெங்களூரில் 24 நிலையங்களையும், சென்னையில் 7நிலையங்களையும் அமைத்து உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் சென்னையில் மட்டும் 50 நிலையங்கள் அமைப்பதாக கூறி உள்ளது.
மேலும் ஏதர் எனர்ஜி சார்ஜிங் நிலையங்களில் வேறு நிறுவனத்தின் வாகனங்களுக்கு கூட இலவசமாக சார்ஜ் செய்து கொள்ளலாம் என கூறியுள்ளது.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…