அண்ணா நகர் 5-வது அவென்யூ சரவணபவன் அருகே 5 மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதைதொடர்ந்து, 10 தீயணைப்பு வாகனங்களில் சென்று தீயை அணைக்கும் பணிகளில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
5 அடுக்குமாடி கட்டிடத்தின் தரைத்தளத்தில் தனியார் வங்கியும், அடுத்தடுத்த தளங்களில் ஐடி நிறுவனம் ஒன்றும், பல தனியார் நிறுவனங்களும் இயங்குவதாகவும் கூறப்படுகிறது. இன்று அலுவலக நாட்கள் என்பதால் அனைத்து ஊழியர்களும் பணிபுரிந்து கொண்டிருந்தனர்.
தரைத்தளத்தில் இயங்கிவரும் வங்கியில் இருந்து முதலில் தீப்பற்றியுள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்து தளங்களுக்கு மின்கசிவு மூலமாக தீ வேகமாக பரவியது. இதனால் 5 மாடி வரையிலும் தீ கொழுந்து விட்டு எறிந்தது. தீ பற்றியெரிந்த தகவல் அறிந்து, தீயணைப்பு துறையினரும் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
வங்கி மற்றும் தனியார் நிறுவனங்களிலும் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் தீ விபத்து ஏற்படும் ஆரம்ப நிலையிலே வெளியில் வந்துவிட்டனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதி வழியாக செல்லும் வாகனங்கள் மாற்றுவழியில் செல்லுமாறு திருப்பி விடப்பட்டன.
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…