அண்ணா நகர் 5-வது அவென்யூ சரவணபவன் அருகே 5 மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதைதொடர்ந்து, 10 தீயணைப்பு வாகனங்களில் சென்று தீயை அணைக்கும் பணிகளில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
5 அடுக்குமாடி கட்டிடத்தின் தரைத்தளத்தில் தனியார் வங்கியும், அடுத்தடுத்த தளங்களில் ஐடி நிறுவனம் ஒன்றும், பல தனியார் நிறுவனங்களும் இயங்குவதாகவும் கூறப்படுகிறது. இன்று அலுவலக நாட்கள் என்பதால் அனைத்து ஊழியர்களும் பணிபுரிந்து கொண்டிருந்தனர்.
தரைத்தளத்தில் இயங்கிவரும் வங்கியில் இருந்து முதலில் தீப்பற்றியுள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்து தளங்களுக்கு மின்கசிவு மூலமாக தீ வேகமாக பரவியது. இதனால் 5 மாடி வரையிலும் தீ கொழுந்து விட்டு எறிந்தது. தீ பற்றியெரிந்த தகவல் அறிந்து, தீயணைப்பு துறையினரும் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
வங்கி மற்றும் தனியார் நிறுவனங்களிலும் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் தீ விபத்து ஏற்படும் ஆரம்ப நிலையிலே வெளியில் வந்துவிட்டனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதி வழியாக செல்லும் வாகனங்கள் மாற்றுவழியில் செல்லுமாறு திருப்பி விடப்பட்டன.
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…