5 ஸ்டார் சாக்லேட்டில் புழு.. மிரண்டு போன குழந்தைகள்..!

Default Image

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் உள்ள பட்டணம் பகுதியை சேர்ந்த குழந்தைகள் சிலர் அங்கு இயங்கி வரும் கடையில் பைவ் ஸ்டார் சாக்லேட் வாங்கி வந்தனர். வீட்டிற்கு சென்று அந்த சாக்லேட்டை பிரித்து பார்கும்போது, அதில் புழுக்கள் ஊர்ந்து கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள், இதுகுறித்து அந்தக் கடைக்காரரிடம் கேட்டுள்ளனர். அவர், ராசி புரத்தை சேர்ந்த மொத்த விற்பனையாளரான கிருஷ்ணா ஏஜென்சியிடம் இருந்த அந்த சாக்லேட்டை வாங்கியதாகவும், அவர்கள் மீது உணவு பாதுகாப்புத் துறையினரிடம் புகார் அளிக்க உள்ளதாகவும் கூறினார்.

Image result for ஃபைவ் ஸ்டார் சாக்லேட்டில் புழுக்கள்

மேலும் சாக்லேட் மேல் உறையில் அதன் பேக்கிங் தேதி ஜனவரி மாதம் 29 ஆம் தேதி என்று குறிப்பிட்டிருந்தது. பேக் செய்த தேதியிலிருந்து 9 மாதங்கள் வரை அதனை பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சாக்லேட்டின் காலாவதி தேதி முடிய இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில், அதில் புழுக்கள் இருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்