கோவை கார் வெடி விபத்து சம்பவத்தில் கைதான 5 பேரும் சிறையிலடைப்பு..!

Default Image

கோவை கார் வெடி விபத்து சம்பவத்தில் கைதான 5 பேரும் கோவை மத்திய சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, கோவையில் கோட்டைமேடு பகுதியில் கார் சிலிண்டர் வெடித்து ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து  சோதனையில், கார் விபத்து ஏற்பட்ட இடத்திலும், ஜமேசா முபின் வீட்டிலும் வெடிகுண்டு சம்பந்தமான பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

போலீசார் மேற்கொண்ட சோதனையில், சிசிடிவி காட்சியின் அடிப்படையில், ஜமேசா முபினுடன் இருந்த ஐந்து பேரை  காவல்துறையினர் கைது செய்தனர். கைதான 5 பேர் மீதும் உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டது.

இந்த சம்பவத்தில் கைதான 5 பேரையும் அடுத்தமாதம் 8-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு மாவட்ட நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள நிலையில், 5 பேரும் கோவை மத்திய சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்