கடலூர் மாவட்டம் அக்ராமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ. இவர் புதுச்சேரியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்ற போது அப்பகுதியில் உள்ள அருண்ராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து இருவரும் காதலித்து வந்துள்ளனர். பின்னர் அருண்ராஜ் , ஜெயஸ்ரீ இருவரும் வீட்டின் சம்மதத்துடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் ஜெயஸ்ரீ 5 மாத கர்ப்பிணியாக இருந்து உள்ளார்.அப்போது அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையெடுத்து அருண்ராஜ் வீட்டினர் வளைகாப்பு நிகழ்ச்சியில் ஜெயஸ்ரீக்கு தங்க விலையில் போட சொல்லி கூறியுள்ளனர். ஆனால் அந்த நிகழ்ச்சியில் ஜெயஸ்ரீ குடும்பத்தினர் தங்க வளையல் போடவில்லை.
இதனால் ஜெயஸ்ரீ குடும்பத்திற்கும், அருண்ராஜ் குடும்பத்திற்கும் தகராறு ஏற்பட்டது.இந்த தகராறில் ஜெயஸ்ரீயின் சகோதரர் அருண்ராஜை தாக்கியுள்ளார். பின்னர் இரு குடும்பத்தினரும் சமாதானம் ஆகி உள்ளனர்.இதையெடுத்து ஜெயஸ்ரீ அழைத்துக் கொண்டு அருண்ராஜ் புதுச்சேரி வந்து உள்ளனர். புதுச்சேரி வந்த சில நாட்கள் கழித்து ஜெயஸ்ரீ தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அருண்ராஜ் குடும்பத்தினர் ஜெயஸ்ரீ குடும்பத்திற்கு கூறி உள்ளனர்.
ஜெயஸ்ரீயின் தாய் விஜயா தங்கள் மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…