கடன் சுமை தாங்கமுடியாமல் கணவன், மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் அருகே புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த தச்சு தொழிலாளி மோகன் (வயது 38) என்பவர் மரப்பட்டறை நடத்தி வருகிறார். இந்நிலையில், இன்று காலை முதல் மோகன் வீட்டில் இருந்து நீண்ட நேரம் ஆகியும், யாரும் வெளிய வராததால் அருகில் இருந்தவர்கள் சந்தேகப்பட்டு வீடு கதவை உடைத்துக்கொண்டு உள்ளே பார்த்தபோது மோகன் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வளனூர் காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்தவர்கள் உடல்கள் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
இந்த சம்பவம் குறித்த கூறுகையில், மோகன் கடன் சுமை தாங்கமுடியாமல் ரொம்பவும் கஷ்டப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த கந்துவட்டி பிரச்சனையால் நேற்று இரவு மோகன் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் போது இந்திய…
சென்னை : பிரபல பின்னணி பாடகரான கே.ஜே.யேசுதாஸ் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்கிற…
சென்னை : ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு…
சென்னை : தமிழ்நாடு தேசிய கல்வி கொள்கையை ஏற்றால் தான் நிதி தருவோம் என்ற நிலைப்பாட்டுடன் இருப்பதாகவும், தேசிய கல்வி…
டெல்லி : வக்பு வாரியம் என்பது இஸ்லாமிய மக்களால் தானமாக வழங்கப்பட்ட சொத்துக்களை நிர்வகிக்கும் ஒரு இஸ்லாமிய அமைப்பு ஆகும்.…
சென்னை : எம்.ஜி.ஆர் - சிவாஜி காலத்தில் இருந்து சினிமாவில் பாட துவங்கி, தற்போது அஜித் - விஜயை தொடர்ந்து…