விபத்தில் இறந்த கர்ப்பிணி குடும்பத்திற்கு 5 லட்சம் நிவாரணம்- முதல்வர் அறிவிப்பு..!

Published by
murugan

கள்ளக்குறிச்சி அருகே ஆம்புலன்ஸ் விபத்தில் உயிரிழந்த கர்ப்பிணி ஜெயலக்ஷ்மி குடும்பத்திற்கு 5 லட்சம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி அருகே ஆம்புலன்ஸ் விபத்தில் உயிரிழந்த கர்ப்பிணி ஜெயலக்ஷ்மி குடும்பத்திற்கு 5 லட்சமும், விபத்தில் இறந்த ஜெயலட்சுமியின் மாமியார் செல்வி, நாத்தனார் அம்பிகா குடும்பத்துக்கும் தலா 3 லட்சம் நிதியுதவி முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதி உதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சி மாவட்டம்: கள்ளக்குறிச்சி காவல் நிலைய சரகத்தில் இன்று (10.6.2021) அதிகாலை வடபொன்பரப்பி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதுப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து திருமதி ஜெயலட்சுமி என்பவர் பிரசவத்திற்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டார் அவருடன் அவரது மாமியார் திருமதி செல்வி, நாத்தனார் திருமதி அம்பிகா ஆகியோரும் உடன் வந்த போது கள்ளக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆலத்தூர் ஏரி அரிபெருமானூர் ஏரிக்கரை அருகே. 108 ஆம்புலன்ஸ் வாகனத்தின் டயர் வெடித்து மரத்தில் மோதி ஏற்பட்ட விபத்தில் திருமதி ஜெயலட்சுமி மருத்துவமனைக்கு வரும் வழியிலும், அவரது மாமியார் மற்றும் நாத்தனார் சம்பவ இடத்திலேயும் இறந்துவிட்டனர்.

இந்தத் துயர சம்பவத்தை அறிந்த  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மிகவும் வேதனையுற்று தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டதோடு, இச்சம்பவத்தில் உயிரிழந்த கர்ப்பிணிப் பெண் திருமதி ஜெயலட்சுமியின் குடும்பத்திற்கு ஐந்து இலட்சம் ரூபாயும், அவருடன் உயிரிழந்த அவரது மாமியார் திருமதி செல்வி மற்றும் நாத்தனார் திருமதி அம்பிகா ஆகியோர் குடும்பத்திற்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்கள்.

அதோடு விபத்தில் உயிரிழந்த இம்மூவருக்கும் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் சேர வேண்டிய பணப்பயன்களைப் பெற்று வழங்கவும் ஆணையிட்டுள்ளார்கள் என தெரிவிக்கபப்ட்டுள்ளது.

Published by
murugan

Recent Posts

LSG vs DC : அதிரடி காட்டிய லக்னோ! இறுதியில் சுருட்டிய டெல்லி! இதுதான் டார்கெட்!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…

2 seconds ago

LSG vs DC : பதிலடி கொடுக்குமா லக்னோ? டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சு தேர்வு!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…

2 hours ago

பயங்கரவாதிகள் தாக்குதல் : உத்தரவிட்ட பிரதமர் மோடி! காஷ்மீர் விரையும் அமித்ஷா!

ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…

3 hours ago

J&K சுற்றுலா பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு.! ஒருவர் உயிரிழப்பு.., 10 பேர் படுகாயம்.!

பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…

3 hours ago

“எல்லோருக்கும் மிகப்பெரிய நன்றி!” அஜித் குமார் டீம் நெகிழ்ச்சி!

சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…

3 hours ago

இனி எல்லாமே வெற்றி தான்., பிளே ஆஃப் உறுதி? CSK சிஇஓ நம்பிக்கை!

சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…

4 hours ago