சென்னையில் விண்ணப்பிக்கப்பட்ட 5 லட்சம் இ-பாஸ் – 3 லட்சத்துக்குமேல் நிராகரிப்பு!

Default Image

சென்னை மாநகராட்சியில் விண்ணப்பிக்கப்பட்ட 5 லட்சத்துக்கும் அதிகமான இ பாஸ் விண்ணப்பத்தில் குறிப்பிட்ட காரணங்கள் இல்லாமல் வந்த, 3 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது, அதிலும் தமிழகத்திலுள்ள சென்னை மாநகரத்தில் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், வெளி ஊர்களுக்கு செல்ல வேண்டுமானால் முன்னதாகவே இ பாஸ் விண்ணப்பித்து அனுமதி பெற்றே செல்ல வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனால் பல லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்த பின்பு அனுமதி வந்தால் தான் தாங்கள் விரும்பிய இடத்திற்கு செல்கின்றனர். இந்நிலையில் ஆட்சியர் அலுவலகத்திற்கு கடந்த சில நாட்களாகவே குவிந்த இ பாஸ் விண்ணப்பங்கள் 5 லட்சத்துக்கும் அதிகமானவைகளாம். ஆனால், அவைகளில் 3 லட்சத்துக்கும் அதிகமானவை நிராகரிக்கப்பட்டு தான் உள்ளதாம். முறையான காரணங்களின்றி விண்ணப்பிக்கப்பட்டவை நிராகரிக்கப்பட்டுள்ளன என ஆணையர் ஜி பிரகாஷ் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்