நீட் தேர்வால் உயிரிழந்த அனிதாவின் 4-ஆம் ஆண்டு நினைவு தினம்…! சீமான் ட்வீட்…!

Default Image

சமூக நீதிக்கு எதிரான ‘நீட்’ தேர்வுமுறையை ஒழிக்க சட்டத்தின் வழிநின்று் போராடி, கல்வி உரிமைக்காக தன்னுயிர் ஈந்த தங்கை அனிதா அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவைப் போற்றுவோம்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தை சேர்ந்த மாணவி தான் அனிதா. சிறுவயதிலேயே தனது தாயை இழந்த இவர் அவரது தந்தையான சண்முகத்தின் அரவணைப்பில் வாழ்ந்து வந்தார். அவரது தந்தை ஒரு கூலித்தொழிலாளி. படிப்பில் மிகவும் கெட்டிக்காரியாக விளங்கிய அனிதா பத்தாம் வகுப்பில் 478 மதிப்பெண்களும், 12-ஆம் வகுப்பில் 1176 மதிப்பெண்களும் பெற்று சாதனை புரிந்தார்.

இந்த நிலையில், அனிதாவின் கனவு மருத்துவர் ஆக வேண்டும் என்பது தான்.  பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடந்தால் அனிதாவுக்கு சென்னையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தால், ஆனால் அவர் நீட் தேர்வு எழுதிய அனிதாவால், 76 மதிப்பெண்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் ஜிப்மர் நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை.

இதன் காரணமாக மனமுடைந்த அனிதா தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில்  நீட் தேர்வால் உயிரிழந்த அனிதாவிற்கு இன்று நான்காம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

இது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சமூக நீதிக்கு எதிரான ‘நீட்’ தேர்வுமுறையை ஒழிக்க சட்டத்தின் வழிநின்று் போராடி, கல்வி உரிமைக்காக தன்னுயிர் ஈந்த தங்கை அனிதா அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவைப் போற்றுவோம்! தங்கையின் நினைவைச் சுமந்து, கல்வியுரிமையை வென்றெடுக்க உறுதியேற்போம்!’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

TN Budget - TN Govt
train hijack pakistan
DMK - Revanth Reddy
udhayanidhi stalin annamalai
annamalai ptr
gold price