திருச்சி லலிதா ஜுவல்லரியில் கடந்த அக்டோபர் 2-ம் தேதி ரூ.13 கோடி ரூபாய் மதிப்பில் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக திருவாரூரை சேர்ந்த மணிகண்டன் , மதுரையை சேர்ந்த கணேசன் மற்றும் கனகவல்லி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
முக்கிய குற்றவாளிகளான கனகவல்லி மகன் சுரேஷ் சங்கம் நீதிமன்றத்திலும் ,கொள்ளை கும்பல் தலைவனான முருகன் பெங்களூருவில் உள்ள 11-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இந்நிலையில் கடந்த 26-ம் தேதி பெங்களூர் போலீசார் முருகனை திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் கடந்த மாதம் 27-ம் தேதி முருகனை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் ஒரு வாரம் அனுமதி கொடுத்தது. இதையடுத்து போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வந்தனர்.
லலிதா ஜுவல்லரியில் மொத்தமாக 28 கிலோ 750 கிராம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. ஆனால் தற்போது 24 கிலோ 550 கிராம் நகைகள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 4 கிலோ 200 கிராம் நகையை இன்னும் போலீசார் கைப்பற்றவில்லை. இதுபற்றி முருகனிடம் போலீசார் விசாரித்தில் தன்னிடம் இனிமேல் எந்த வித நகையும் இல்லை என முருகன் கூறியுள்ளார்.
தொடர்ந்து நேற்று முன்தினம் சுரேஷ் மனைவி கீதா மற்றும் மதுரை சார்ந்த இரண்டு நகை வியாபாரிகளை போலீசார் வரவைத்து அவர்களிடம் முருகன் ஏதாவது நகை கொடுத்தாரா என விசாரணை செய்தனர். ஆனால் அவர்களிடமிருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
மீதமுள்ள 4 கிலோ 200 கிராம் நகையை முருகனிடம் இருந்து வாங்க போலீசார் திணறி வருகின்றனர். இந்நிலையில் முருகனை காவலில் வைத்து விசாரிக்க இன்றுடன் முடிவடைந்த நிலையில் போலீசார் முருகனை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தியுள்ளனர்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…