என் நண்பர்கள் 49 பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு இயக்குனர் மணிரத்னம்,நடிகை ரேவதி உள்ளிட்ட 49 பேர் கடிதம் எழுதினார்கள்.அந்த கடிதத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் மீது நடைபெறும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.ஆனால் இவர்கள் மீது வழக்கறிஞர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் பீகார் காவல்த்துறை தேசத்துரோக வழக்கு பதிவு செய்தது.இதற்கு பல தரப்பினரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், என் நண்பர்கள் 49 பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும்.பிரதமர் ஒரு இணக்கமான இந்தியாவை விரும்புகிறார், மாநிலங்களும், சட்டமும் அதை பின்பற்ற வேண்டாமா? என்று கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மகாராஷ்டிரா :தென்னிந்தியாவில் ஏற்கனவே, மொழிப் போர் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசு மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இது…
கொடைக்கானல்: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு…
டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…
சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…