புயல் காரணமாக தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் 4,600 படகுகள் கடலுக்கு செல்லவில்லை..

Published by
Dinasuvadu desk

புயல் எச்சரிக்கை  காரணமாக தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் சுமார் 4,600க்கும் மேற்பட்ட படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை. தென்மேற்கு வங்க கடலில், இலங்கையின்  தெற்கு பகுதியில் புயல் மையம் கொண்டுள்ளது. இது குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் வாய்ப்பு உள்ளதால்,

தமிழகம் மற்றும் கேரள பகுதிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதையடுத்து கடந்த 3 நாட்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் படகுகள் கடலுக்கு செல்லவில்லை. மாவட்டம் முழுவதும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும், 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

இந்நிலையில் நேற்றும் வேம்பார் முதல் பெரியதாழை வரையிலான பகுதிகளில் நாட்டுபடகுகள், கட்டுமரங்கள், வல்லங்கள் என 3,500க்கும் மேற்பட்ட படகுகள் கடலுக்குள் செல்லவில்லை. வேம்பார், புன்னக்காயல், தருவைகுளம் உள்ளிட்ட பகுதிளிலும் விசைப்படகுகள் 100க்கும் மேற்பட்டவை மீன்பிடிக்க செல்லவில்லை. மணப்பாடு கிராமத்தில்  விசைபடகுகள், பைபர் படகுகள் என சுமார் 300க்கும் மேற்பட்ட  படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

ஏற்கனவே கடந்த 10ம்தேதி  முதலே மீனவர்கள் கடல் தொழிலுக்குச் செல்லவில்லை. மீன்பிடி தொழிலையே நம்பி  வாழும் மீனவ குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. புயல் சின்னம் எதிரொலியாக தூத்துக்குடி, முத்தையாபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 மணியளவில் பலத்த மழை பெய்தது. திசையன்விளை: நெல்லை மாவட்டத்தில் உள்ள கடற்கரையோர பகுதிகளான உவரி, கூடுதாழை, பெரியதாழை ஜார்சியா நகர், கூட்டப்பனை, கூத்தங்குழி, இடிந்தகரை, கூட்டப்புளி, தோமையார்புரம், பெருமணல் உள்ளிட்ட இடங்களில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

Published by
Dinasuvadu desk

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : 34 ஆயிரம் கர்நாடகா கோயில்களுக்கு பறந்த உத்தரவு.!

திருப்பதி லட்டு விவகாரம் : 34 ஆயிரம் கர்நாடகா கோயில்களுக்கு பறந்த உத்தரவு.!

பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…

10 mins ago

INDvsBAN : வங்கதேசத்துக்கு 515 ரன்கள் இலக்கு! கட்டுப்படுத்துமா இந்திய அணி?

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…

21 mins ago

“நமக்கு அது செட் ஆகாது”…வேட்டையன் இயக்குனருக்கு கண்டிஷன் போட்ட ரஜினிகாந்த்!

சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…

43 mins ago

“நான் ஒரு தோற்றுப்போன அரசியல்வாதி.,” கமல்ஹாசன் பேச்சு.!

சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…

45 mins ago

பாடகியுடன் தொடர்பா? “சொந்த வாழ்க்கையில் தலையிடாதீர்” பொங்கிய ஜெயம் ரவி.!

சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…

1 hour ago

“அவங்களுக்கு மன நலம் சரியில்லை”…சுசித்ரா வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த வைரமுத்து?

சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…

1 hour ago