கடந்த 44 நாட்களாக தண்ணீரை குடித்து உறங்கினேன்.! மதுபிரியரின் ஏக்கம் கலந்த கவலை.!

Published by
மணிகண்டன்

கடந்த 44 நாட்களாக மது கிடைக்காமல் மிகுந்த மன வருத்தத்தில் இருந்து, தினமும் பச்சை தண்ணீரை கண்ணீருடன் குடித்து உறங்கி வந்ததாக கோவை மாவட்டம் புளியங்குளத்தை சேர்ந்த நாகராஜ் என்கிற முதியவர் ஏக்கத்துடன் தெரிவித்துள்ளார். 

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் மூன்றாம் கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுளளது. இந்த மூன்றாம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் படி பலவேறு மாநிலங்களில் கடந்த திங்கள் கிழமை முதல் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. 

தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இன்று மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இன்று வயது வாரியாக குறிப்பிட்ட நேரக்கட்டுப்பாட்டுக்குள் மது வாங்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 50 வயதுக்கு மேல் உள்ளவர்கள் 10 மணி முதல் 1 மணி வரையிலும் 1 மணி முதல் 3 மணி வரையில் 40 முதல் 50 வயதினரும், 3 மணிக்கு மேல் 40 வயதிற்கு உட்பட்டவர்களும் மது வாங்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கடந்த 44 நாட்களாக மது கிடைக்காமல் மிகுந்த மன வருத்தத்தில் இருந்து, தினமும் பச்சை தண்ணீரை கண்ணீருடன் குடித்து உறங்கி வந்ததாக கோவை மாவட்டம் புளியங்குளத்தை சேர்ந்த நாகராஜ் என்கிற முதியவர் ஏக்கத்துடன் தெரிவித்துள்ளார். 

மேலும், 44 நாட்களுக்கு பிறகு மதுக்கடைகள் திறக்கும் செய்தி அறிந்தவுடன் அதிகாலையிலேயே எழுந்து குளித்து கடைக்கு வந்துவிட்டதாக அம்முதியவர் தெரிவித்தார். 

Published by
மணிகண்டன்

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

8 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

13 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

13 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

13 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

13 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

13 hours ago