தமிழகத்தில் பற்றாக்குறை என்பது கடந்த சில மாதத்திற்கு முன்பாக ஏற்பட்டதாக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசும் போது தெரிவித்தார். இதைத் தொடர்ந்து மத்திய அரசு போதுமான தடுப்புப்பூசிகளை தமிழகத்தில் ஒதுக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் கடிதம் மூலம் தெரிவித்தார்.
இந்நிலையில், அடுத்த மாதம் ஜூலை 2-ம் தேதி வரை மத்திய அரசு தேதி வாரியாக ஒதுக்கியுள்ள தடுப்பூசியின் அளவை மாநில அரசு தற்போது வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்திற்கு அடுத்த மாதம் ஜூலை 2-ம் தேதி வரை மொத்தமாக 42 லட்சத்து 58 ஆயிரத்து 760 தடுப்பூசி வர உள்ளன. இதில் 18 வயது முதல் 44 வயது உடையவர்களுக்கு என 13 லட்சத்து 43 ஆயிரத்து 380 கோவிஷீல்டு தடுப்பூசியும், 3 லட்சத்து 30 ஆயிரத்து 560 கோவாக்சின் தடுப்பூசியும் ஆக மொத்தம் 16 லட்சத்து 74 ஆயிரத்து 380 தடுப்பூசிகள் 18 வயது முதல் 44 வயது உடையவர்களுக்கு வர உள்ளது.
44 வயது மேற்பட்டவர்களுக்கு 21 லட்சத்து 55 ஆயிரத்து 180 கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 4 லட்சத்து 29 ஆயிரத்து 200 கோவாக்சின் தடுப்பூசிகளும் ஆக மொத்தம் 25 லட்சத்தை 84 ஆயிரத்து 380 தடுப்பூசிகளும் வர உள்ளது.
சென்னை : சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, அவரது சென்னை இல்லத்தில் போலீஸ் சம்மன் ஒட்டினர்.…
சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…
சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…
சென்னை : நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பெயரில் சென்னை வளசரவாக்கம் போலீசார் சீமான், விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும்…
சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் ”குட் பேட் அக்லி” திரைப்படத்தின் டீஸர் நாளை இரவு…