தமிழகத்திற்கு ஜூலை 2-ம் தேதிக்குள் 42.58 லட்சம் தடுப்பூசிகள் வருகை..!

Published by
murugan
  • அடுத்த மாதம் ஜூலை 2-ம் தேதி வரை மத்திய அரசு தேதி வாரியாக ஒதுக்கியுள்ள தடுப்பூசியின் எண்ணிக்கையை மாநில அரசு தற்போது வெளியிட்டுள்ளது.
  • தமிழகத்திற்கு அடுத்த மாதம் ஜூலை 2-ம் தேதி வரை மொத்தமாக 42 லட்சத்து 58 ஆயிரத்து 760 தடுப்பூசி வர உள்ளன.

தமிழகத்தில் பற்றாக்குறை என்பது கடந்த சில மாதத்திற்கு முன்பாக ஏற்பட்டதாக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசும் போது தெரிவித்தார். இதைத் தொடர்ந்து மத்திய அரசு போதுமான தடுப்புப்பூசிகளை தமிழகத்தில் ஒதுக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் கடிதம் மூலம் தெரிவித்தார்.

இந்நிலையில், அடுத்த மாதம் ஜூலை 2-ம் தேதி வரை மத்திய அரசு தேதி வாரியாக ஒதுக்கியுள்ள தடுப்பூசியின் அளவை மாநில அரசு தற்போது வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்திற்கு அடுத்த மாதம் ஜூலை 2-ம் தேதி வரை மொத்தமாக 42 லட்சத்து 58 ஆயிரத்து 760 தடுப்பூசி வர உள்ளன. இதில் 18 வயது முதல் 44 வயது உடையவர்களுக்கு என 13 லட்சத்து 43 ஆயிரத்து 380 கோவிஷீல்டு தடுப்பூசியும், 3 லட்சத்து 30 ஆயிரத்து 560 கோவாக்சின் தடுப்பூசியும் ஆக மொத்தம் 16 லட்சத்து 74 ஆயிரத்து 380 தடுப்பூசிகள் 18 வயது முதல் 44 வயது உடையவர்களுக்கு வர உள்ளது.

44 வயது மேற்பட்டவர்களுக்கு 21 லட்சத்து 55 ஆயிரத்து 180 கோவிஷீல்டு  தடுப்பூசிகளும், 4 லட்சத்து 29 ஆயிரத்து 200 கோவாக்சின் தடுப்பூசிகளும் ஆக மொத்தம் 25 லட்சத்தை 84 ஆயிரத்து 380 தடுப்பூசிகளும் வர உள்ளது.

Published by
murugan
Tags: #Vaccine

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

10 hours ago
விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

11 hours ago
மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

12 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

12 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

13 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

13 hours ago