தமிழகம் முழுவதும் 41 டிஎஸ்பி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!

Default Image

தமிழகம் முழுவதும் காவல் துறையில் உதவி ஆணையர்கள் மற்றும் துணை கண்காணிப்பாளராக பணிபுரியும் அதிகாரிகள் உட்பட 41 பேருக்கு ADSP பதவி உயர்வை தமிழக அரசு வழங்கியுள்ளது. பதவி உயர்வு பெரும் காவல் துறையினர் அனைவரும் 1987ம் ஆண்டு பணியில் சேர்ந்து தொடர்ந்து கேட்டகிரி 1 எனப்படும் சட்ட ஒழுங்கை பராமரிக்கும் பணியில் பணிபுரிந்து தற்போது காவல் உதவி கண்காணிப்பாளராக பணியில் இருப்பவர்கள்.
இவர்களுக்கான பதவி உயர்வு குறித்து,தமிழக டிஜிபி ராஜேந்திரன் அளித்த அறிக்கையின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படுவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பதவி உயர்வின் மூலம் இனி இவர்கள் கூடுதல் காவல் ஆணையர்களாகவும்,கூடுதல் காவல் கண்காணிப்பாளராகவும் பணியில் இருப்பர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்