கொரோனா பெருந்தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த மே 10ஆம் தேதி முதல் தற்போது வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசிய கடைகள் மட்டுமே திறந்திருக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த ஒரு மாத காலமாக தமிழகம் முழுவதிலும் மதுபான கடைகள் அடைக்கப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு 40 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் கடத்தப்பட்டுள்ளதாக காவல் கண்காணிப்பாளர் மகேஷ் குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக கர்நாடக மாநில எல்லையில் வாகன சோதனையில் ஈடுபட்ட பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய காவல் கண்காணிப்பாளர் மகேஷ் குமார் அவர்கள், கர்நாடகாவில் இருந்து காய்கறி பழங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரக்கூடிய வாகனங்களில் மது கடத்தல் நடைபெற்றதாக கூறியுள்ளார். மேலும், ஊரடங்கு போடப்பட்டுள்ள இந்த ஒரு மாதத்தில் மட்டும் 40 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதனை கடத்தி வந்த 40 கார்கள் மற்றும் 80 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான…
சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 2, குரூப் 2ஏ பிரதான ( Main)…
சென்னை : ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் மற்றும் டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை நடைபெறவுள்ளது.…
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…
டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக 104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…