கொரோனா ஊரடங்கால் ஈரானில் சிக்கி தவித்த 40 மீனவர்கள் தமிழகம் வருகை!

Default Image

கொரோனா ஊரடங்கால் ஈரானில் சிக்கி தவித்த 40 மீனவர்கள் தமிழகம் வருகை.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவால், வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் சென்று வேலை செய்தவர்கள் மீண்டும் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப இயலாமல் தவித்து வந்தனர்.

இந்நிலையில், ஈரானில் சிக்கிய 687 தமிழக மீனவர்கள், கடந்த மாதம் 26ந் தேதி கப்பலில் தூத்துக்குடி அழைத்து வரப்பட்டனர். மீதமிருந்த 40 பேர் விமானம் முலம் டெல்லி வழியாக சென்னை விமான நிலையத்திற்கு வந்தனர். இவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்