திருமணமாகி 40 நாட்களேயான பெண்.. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை.!

Default Image

திருமணமாகி 40 நாட்களேயான புதுமணப் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் டோல்கேட்டுக்கு அருகிலுள்ள வாழ்வந்தான்புரத்தில் வசித்து வருபவர் அருள் சாமி. இவர் கடந்த மாதம் கிறிஸ்டி ஹெலன்ராணி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணமான நாட்கள் முதலே இருவருக்கும் இடையில் சண்டை நிலவி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் 26வயதான புதுமண பெண்ணான கிறிஸ்டி வீட்டின் அருகேயுள்ள கொள்ளிடம் ஆற்றிற்கு அதிகாலையில் சென்றுள்ளார்.

வெகு நேரமாகியும் கிறிஸ்டி திரும்பி வராத நிலையில், கொள்ளிடம் ஆற்றில் சென்ற பார்த்த உறவினர்கள் கிறிஸ்டியை அரை நிர்வாணமாக ஆற்றில் மிதந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர் . உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் நடத்திய விசாரணையில் பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதாகவும், அவர் 5 சவரன் நகை காணாமல் போயுள்ளதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பெண்ணின் கணவர் அவரை பூச்சிக்கொல்லி மருந்தை கொடுத்து கொல்ல முயன்றதாக பெண்ணின் பெற்றோர்கள் குற்றம்சாட்டியதை அடுத்து போலீசார் கணவர் அருள்சாமியை விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். மேலும், இந்த பகுதியில் இரவு நேரங்களில் ஆட்கள் நடமாட்டம் உள்ள காரணத்தால் வேறு யாராவது பெண்ணை கற்பழித்து கொலை செய்திருக்க வாய்ப்பு இருப்பதாக கூறி அந்த கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணமான 40 நாட்களிலே புதுமண பெண் கற்பழித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்