முற்புதற்குள் நாசப்படுத்தப்பட்ட நிலைமையில் இறந்து கிடந்த 4 வயது பெண் குழந்தை!

Default Image

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் அமித்.இவர் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளமேடு பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.இவர் அங்குள்ள செங்கல் சூளையில் வேலைபார்த்து வருகிறார்.

இவரது 4 வயது மகள் வீட்டின் அருகில் விளையாடி கொண்டிருந்துள்ளார்.சிறிது நேரத்தில் விளையாடி கொண்டிருந்த குழந்தை காணாமல் சென்றுள்ளது.பதறி போன பெற்றோர் குழந்தையை அனைத்து இடத்திலும் தேடி பார்த்துள்ளனர்.

பின்னர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.இந்நிலையில் மறுநாள் காலை செங்கல் சூலையின் பின்புறம் உள்ள புதரில் ஏதோ ஒரு குழந்தை இறந்து கிடந்துள்ளது.இதனை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அந்த குழந்தையின் உடம்பில் காயங்கள் இருந்துள்ளது .இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.உடனே விரைந்து வந்த காவல்துறையினர் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

பின்னர் குழந்தை வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என்ற எண்ணத்தில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.பின்னர் அமித்துடன் வேலை பார்க்கும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மிராசு,சந்திரபானு என்ற இருவரையும் விசாரித்து வருகின்றன.

ஒரே பகுதியில் வசிக்கும் இருவரை பிடித்து விசாரணை நடத்தி வந்தாலும் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வந்தபிறகுதான் விவரம் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்