சென்னை ஆவடியில் நான்கு வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் முன்னாள் ராணுவ வீரர் மற்றும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை ஆவடி பகுதியில் வசித்து வரும் 4 வயதே ஆன சிறுமி தன் பெற்றோர் வெளியில் சென்றிருந்த நிலையில் தனியாக அவரது இல்லத்தில் இருந்துள்ளார். அவரது இல்லத்திற்கு பின்புறம் உள்ள இல்லத்தில் வசித்து வருபவர் மீனாட்சி சுந்தரம் . ராணுவத்தில் பணிபுரிந்து ஒய்வு பெற்ற இவர் தன் மனைவியுடன் வசித்து வந்துள்ளார். சிறுமி தனியாக வீட்டில் இருப்பதை அறிந்த அவர் வீட்டில் புகுந்து சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.
மேலும் , சிறுமியை தன் வீட்டிற்கு தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில், மயக்கம் அடைந்த அந்த சிறுமி உயிரிழந்துள்ளார். பின்னர், ஒரு மூடையில் சிறுமியின் உடலை கட்டி சிறுமி விட்டு கழிவறையில் வீசியுள்ளார். இந்த கொடூர குற்றத்திற்கு அவரது மனைவி ராஜம்மாளும் துணையாக இருந்து வந்துள்ளார்.
சிறுமியின் வளையலை அடையாளமாக வைத்து குற்றவாளியை கண்டுபிடித்துள்ள காவல் துறையினர் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், குற்றவாளியை தப்பிக்க காவலர்கள் முயற்சி செய்வதாக கூறி சிறுமியின் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…
சென்னை : பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அதிகாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை…
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…