காவல் அதிகாரி வீட்டிற்குள் புகுந்து திருட முயன்ற 4 பெண்கள்!வளைத்து பிடித்த அக்கம்பக்கத்தினர்!

Default Image

திருப்பூரில் கோர்ட் ரோடு முதல் வீதியில் காவல்துறை குடியிருப்பு உள்ளது.அதில் காவலர்கள் குடும்பத்துடன் வசித்துவருகின்றன.அங்கு ஜெ பிளாக்கில் மாநகர ஆயுத படை பிரிவில் பணியாற்றும் சேதுபதி தனது குடும்பத்துடன் வசித்துவருகிறார்.

இந்நிலையில் ஜூலை 11-ம் தேதி மதியம் சேதுபதியின் மனைவி கனகா வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு சமையல் அறையில் சமையல் செய்து கொண்டு இருந்துள்ளார்.அப்போது அவரின் படுக்கை அறையில் இருந்து ஏதோ சத்தம் கேட்டுள்ளது.

என்ன சத்தம் இது என்று பார்க்க கனகா படுக்கை அறைக்கு வந்துள்ளார்.அப்போது அங்கு 4 பெண்கள் பீரோவை தொறந்து அதில் இருந்த துணியை ஒரு பையில் துணிகளை எடுத்து வைத்துக்கொண்டிருந்துள்ளனர்.

அப்போது அதை பார்த்த கனகா அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டுள்ளார்.பின்னர் அந்த பெண்கள் அவரை தள்ளி விட்டுவிட்டு வெளியே ஓடிச்சென்றுள்ளனர்.இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனே அந்த பெண்கள் மடக்கி பிடித்துள்ளனர்.

பின்னர் அவர்களை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.பின்னர் அவர்களை விசாரித்த காவல்துறையினர் அவர்கள் திருப்பூரில் உள்ள வீரபாண்டிபுரம்  அருகே உள்ள பறந்து பாளையத்தைச் சேர்ந்த ராணி,செல்வி,சந்தியா மற்றும் பவானி என தெரியவந்துள்ளது.

பின்னர் திருட முயன்றதால் அந்த பெண்களின் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்