தமிழகத்தில் 4 கோவில்களில் ஆக்கிரமிப்புகளில் உள்ளது என மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
கோயில்களின் ஆக்கிரமிப்பு குறித்து எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் 1097 புராதன இடங்கள் மத்திய அரசால் நினைவுச்சின்னங்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட இடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆந்திரப் பிரதேசம் (135), கர்நாடகா (506), கேரளா (29), புதுச்சேரி-யுடி (07), தமிழ்நாடு (412) மற்றும் தெலுங்கானா (08) ஆகிய 1097 இடங்கள் உள்ளது. இவற்றில் 448 கோவில்கள் உள்ளது.
இதில் தமிழகத்தில் 412 கோயில்கள் பாதுகாக்கப்பட்ட இடங்களாக உள்ள நிலையில், காஞ்சிபுரம் மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவில், காஞ்சிபுரத்தின் தென்னேரி ஆபத்சஹோயேஸ்வரர் கோவில், திருச்சி எரும்பீஸ்வரர் சுவாமி கோவில், தஞ்சாவூரில் உள்ள ஐராதீஸ்வரர் கோவில் ஆகியவை ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ளது. சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பாளர்கள் உடனடியாக ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்ற நோட்டீஸ் பிறப்பித்தும், இடித்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை : கடைசி டி20 போட்டியில் இங்கிலாந்து அணியை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய…
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இருப்பது மீனவ கிராமங்களில்…
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நாளை மறுநாள் (ஜன.5) அங்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பரப்புரை இன்று…
மலேசியா : பிசிசிஐ 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ்…
சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது…
மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.…