தமிழகத்தில் 4 கோவில்களில் ஆக்கிரமிப்புகளில் உள்ளது என மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
கோயில்களின் ஆக்கிரமிப்பு குறித்து எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் 1097 புராதன இடங்கள் மத்திய அரசால் நினைவுச்சின்னங்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட இடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆந்திரப் பிரதேசம் (135), கர்நாடகா (506), கேரளா (29), புதுச்சேரி-யுடி (07), தமிழ்நாடு (412) மற்றும் தெலுங்கானா (08) ஆகிய 1097 இடங்கள் உள்ளது. இவற்றில் 448 கோவில்கள் உள்ளது.
இதில் தமிழகத்தில் 412 கோயில்கள் பாதுகாக்கப்பட்ட இடங்களாக உள்ள நிலையில், காஞ்சிபுரம் மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவில், காஞ்சிபுரத்தின் தென்னேரி ஆபத்சஹோயேஸ்வரர் கோவில், திருச்சி எரும்பீஸ்வரர் சுவாமி கோவில், தஞ்சாவூரில் உள்ள ஐராதீஸ்வரர் கோவில் ஆகியவை ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ளது. சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பாளர்கள் உடனடியாக ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்ற நோட்டீஸ் பிறப்பித்தும், இடித்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…