ரஷ்யாவில் வோல்கா ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 4 தமிழக மாணவர்களின் குடும்பத்திற்கு முக ஸ்டாலின் இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் வோல்காகிராட் பகுதியில் உள்ள மருத்துவ பல்கலைகழகத்தில் தமிழகத்தை சேர்ந்த பல மாணவர்கள் படித்து வருகின்றனர். அதில் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அங்குள்ள வோல்கா நதிக்கரைக்கு சென்று குளிக்கும் போது ஒரு மாணவரை தண்ணீர் அடித்து சென்று விட்டது. அவரை காப்பாற்ற முயற்சித்த சக மாணவர்களில் மூன்று பேரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர்.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் சென்னையை சேர்ந்த ஸ்டீபன், தாராபுரத்தை சேர்ந்த முகமது ஆஷிக், திட்டக்குடியை சேர்ந்த ராமு விக்னேஷ் மற்றும் சேலத்தை சேர்ந்த மனோஜ் என்பது தெரிய வந்துள்ளது. இறந்த 4 பேரின் உடலை விரைவில் தமிழகம் கொண்டு வருமாறு மாணவர்களின் பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு முக. ஸ்டாலின் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். அதில் ரஷ்யாவில் வோல்கா ஆற்றில் தமிழக மாணவர்கள் 4 பேர் இறந்ததை அறிந்து மனம் உடைந்தது என்றும், மகன்களை இழந்த குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் இந்த கடினமான நேரத்தில் அந்த குடும்பங்களுக்கு தேவையான உதவி வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு இந்திய வெளியுறவு அமைச்சரான எஸ். ஜெயசங்கரிடம் கேட்டு கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…
சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…
மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…
பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…
டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…