திருச்சி : வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழப்பு!

Published by
பால முருகன்

திருச்சி மாவட்டம் அரியமங்கலம் அருகே இருக்கும் ரயில் நகர் பகுதியில் இருந்த ஒரு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 2 சிறுமிகள் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1970 ஆண்டு காலகட்டத்தில் கட்டப்பட்ட அந்த வீடு நேற்று இரவு மேற்கூரை இடிந்து விழுந்து துயரசம்பவம் ஏற்பட்டது.

இந்த வீட்டின் உரிமையாளர் ஆட்டோ ஓட்டுநர் மாரிமுத்து என்பவர். இவர் தன்னுடைய தயார், மனைவி, குழந்தைகள் ஆகியோருடன் அந்த வீட்டில் வசித்து வந்துள்ளார். நேற்று இரவு மாரிமுத்தின் மனைவி, தயார், 2 குழந்தைகள் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த நிலையில், திடீரென வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது.

புதுக்கோட்டை விபத்து! நிவாரணம் அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இதில் மாரிமுத்தின் மனைவி, தயார், 2 குழந்தைகள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்கள். நேற்று இரவு புத்தாண்டை முன்னிட்டு அந்த பகுதியில் வெடி வெடிக்கப்பட்டு கொண்டு இருந்த காரணத்தால் இவர்களுடைய வீடு மேற்கூரை இடிந்து விழுந்த சத்தம் வெளியே கேட்கவில்லை.

பிறகு நேரம் கழித்து அக்கம் பக்கத்தினர் வீடு இடிந்து விழுந்ததை பார்த்த மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவலை கொடுத்தனர். பிறகு உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற அவர்கள் இடிந்து விழுந்த கட்டட இடிபாடுகளை அகற்றி சிக்கி இருந்த உடல்களை மீட்டனர். புத்தாண்டை முன்னிட்டு இப்படியான சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

பரபரப்பாக மேட்ச்.., சூப்பர் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற டெல்லி.!

டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…

7 hours ago

நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!

நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…

8 hours ago

மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!

டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…

9 hours ago

“விஜய்யிடமிருந்து முஸ்லிம்கள் தள்ளி இருங்கள்” – அகில இந்திய முஸ்லிம் ஜமாத்.!

சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…

10 hours ago

அதிரடி காட்டுமா ராஜஸ்தான்.? பேட்டிங் செய்ய களமிறங்கும் டெல்லி.! பிளேயிங் லெவன் இதோ…

டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…

12 hours ago

“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!

சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…

12 hours ago