பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தமிழகம் வருகை.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வால், பலர் தங்களது வயிற்று பசியை போக்க கூட இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பொருளாதார நெருக்கடியை தாங்க இயலாமல், மக்கள் அந்நாட்டு அரசுக்கு எதிராகவும் கண்டன குரல்களை எழுப்பி வருகின்றனர். இதற்கிடையில், இலங்கையில் இருந்து தமிழர்களும் அகதிகளாக தமிழகம் வருகை தருகின்றனர்.
இந்த நிலையில், இலங்கை புங்குடுதீவு பகுதியில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தனுஷ்கோடி வந்துள்ளனர். இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் புங்குடுதீவு குறிகட்டுவான் சாலை பகுதியை சேர்ந்த ஜெய பரமேஸ்வரன் (44), இவரது மனைவி மாலினி தேவி (42), மகள் தமிழினி (12), மகன் மாதவன் (7) ஆகியோர் இலங்கை தலைமன்னாரில் இருந்து படகு மூலம் தமிழகம் வந்துள்ளனர்.
இதனையடுத்து, நால்வரையும் மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்ட நிலையில், மண்டபம் அகதிகள் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…