காலையிலேயே தஞ்சாவூர் அருகே சாலை விபத்தில் 4 பேர் உயிரிழப்பு.!

Accident

தஞ்சாவூர் அருகே சேதுபாவாசத்திரம் பகுதியில் நடைபெற்ற கோர விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதன்படி  சின்னபாண்டி, பாக்கியராஜ், ஞானம்மாள், ராணி ஆகிய 4 பேரும் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.

தூத்துக்குடியில் இருந்து நேற்று இரவு காரில் 11 பேர் வேளாங்கண்ணி சென்றுள்ளனர். நள்ளிரவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், பக்கவாட்டில் வந்த வேன் மீது மோதியுள்ளது. இதில் காரில் இருந்த நான்கு பேரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

திருச்சி புறப்பட்டார் பிரதமர் மோடி!

வேனில் இருந்த 7 பேருக்கு காயம் ஏற்பட்டதில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது,  இந்த விபத்து குறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்