தமிழ்நாட்டில் 4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி ஆக பதவி உயர்வு வழங்க தமிழ்நாடு அரசு பரிந்துரை.
தமிழ்நாட்டில் 16 மாவட்ட ஆட்சியர்கள் அதிரடி இடமாற்றம் செய்து தமிழக அரசு நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தது. இதில், மதுரை, ராமநாதபுரம், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சிவகங்கை, திருப்பூர், தஞ்சை, நாகை, தூத்துக்குடி, கடலூர், அரியலூர், ஈரோடு, புதுக்கோட்டை, காஞ்சிபுரம், நாமக்கல், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஆட்சியர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இந்த சமயத்தில், தமிழ்நாடு காவல்துறையில் (ADGP) அந்தஸ்தில் உள்ள 4 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு டி.ஜி.பி. ஆக பதவி உயர்வு வழங்க தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. அதன்படி, தமிழ்நாடு காவல்துறையில் ஏடிஜிபிக்களாக பணியாற்றும் ராஜீவ்குமார், சந்தீப்ராய் ரத்தோர், அபய்குமார் சிங், வன்னிய பெருமாள் ஆகியோர் டிஜிபி-யாக பதவி உயர்வு பெறும் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
இந்த 4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு வழங்க மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்துள்ளது. 1992 பேட்ச் அதிகாரிகளாக ராஜீவ் குமார், சந்திப் ராய் ரத்தோர், அபய்குமார் சிங், வன்னிய பெருமாள் ஆகிய 4 அதிகாரிகள் டி.ஜி.பி. அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : ஸ்டார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாகக் கவின் "Bloody Beggar" எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த…
சென்னை : ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா…
சென்னை : இன்று சென்னையில் நடைபெற்ற இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…