கடலூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு இருந்த 4 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது உயிரிழந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் பரவி வரக் கூடிய கொரோனா வைரஸை ஒழிப்பதற்காக மாநில அரசு பல்வேறு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மீண்டவர்களுக்கு மற்றொரு பெரும் சிக்கலாக கருப்பு பூஞ்சை தொற்று நோய் உருவாகி உள்ளது. கொரோனாவிலிருந்து மீண்டவர்களை அதிகம் தாக்கக் கூடிய இந்த பூஞ்சையால் தமிழகத்திலும் பலர் நாளுக்கு நாள் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த கருப்பு பூஞ்சை தொற்று காரணமாக கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 4 பேர் தற்பொழுது பலியாகியுள்ளனர்.கடலூர் மாவட்டத்திலுள்ள சேத்தியாத்தோப்பு பகுதியை சேர்ந்த 54 வயதுடைய கண்ணன் என்பவர் கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வந்து குணமடைந்த நிலையில், தற்போது அவருக்கு கருப்பு பூஞ்சை நோய் இருப்பது கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதேபோல 54 வயதுடைய பண்ருட்டி தட்டாஞ்சாவடி சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர், வேம்பூர் ராமநாதபுரத்தை சேர்ந்த 55 வயதுடைய ரவிக்குமார் என்பவர், 45 வயதுடைய சேத்தியாதோப்பு பகுதியை சேர்ந்த மீனா ஆகியோர் கடலூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை தொற்றால் உயிரிழந்துள்ளனர். நான்கு பேர் தொடர்ச்சியாக கடலூர் மாவட்டத்தில் உயிரிழந்துள்ள நிலையில் இது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…
பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…
துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…
குஜராத் : ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த் அம்பானியின் விலங்கு மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையமான வந்தாராவை இன்று…