தமிழகத்தில் ஒரே நாளில் 4 பேர் உயிரிழப்பு ! கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41ஆக உயர்வு

Published by
Castro Murugan

தமிழகத்தில்  கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41-ஆக உயர்ந்துள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு செல்கிறது .கோயம்பேடு சந்தையை மையமாக கொண்டு சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது.கடந்த சில நாட்களாக சென்னையில் கொரோனா பாதிப்பு இரட்டை இலக்கத்தில் இருந்து மூன்றிலக்கமாக மாறியுள்ளது.நேற்று மட்டும் சென்னையில் கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 316 ஆகும்.இதனால் அங்கு மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2644 ஆகும்.

 இதனிடையே இன்று காலை சென்னையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.அதன்படி சூளைமேட்டை சேர்ந்த கோயம்பேடு சந்தை வியாபாரி (வயது 56) ஒருவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார்.இவரை போலவே சூளைமேட்டை சேர்ந்த 80 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா சிகிச்சைக்காக கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். 

தாம்பரத்தை சேர்ந்த 77 வயது முதியவர் ஒருவர் கொரோனாவிற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.திருவேற்காட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராயபேட்டையை சேர்ந்த 72 வயது மூதாட்டி ஒருவரும் உயிரிழந்துள்ளார்.இந்த மூதாட்டியின் குடும்பத்தில் உள்ள  5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.இதனால் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 -ல் இருந்து 41 ஆக அதிகரித்துள்ளது.  

 

Published by
Castro Murugan

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

2 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

7 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

7 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

7 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

7 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

7 hours ago