கொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்து தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி, ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்கள் முழுவதுமாக விடுபட்டுள்ளது.
தமிழகத்தில், 3023 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கிருஷ்ணகிரியை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.தற்பொழுது தமிழகத்தில் 3 மாவட்டங்கள் கொரோனா இல்லாத மாவட்டங்களாக மாறியுள்ளது. ஈரோட்டில் 70 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதில் ஒருவர் மட்டும் உயிரிழந்த நிலையில் 69 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் அம்மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது.
நீலகிரியில் 9 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அதில் அனைவரும் நலமுடன் வீடு திரும்பியுள்ளனர். அது போல தூத்துக்குடியில் 27 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு, ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்ற 26 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். எனவே, தூத்துக்குடியும் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது.
இம்மூன்று மாவட்டங்களும் பாதிப்புக்கு பின்பு மீண்டவை. ஆனால், கிருஷ்ணகிரி மாவட்டம் இதுவரை ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லாமல், சுகாதாரமான மாவட்டமாக உள்ளது. இதன் படி தமிழகத்தில், கிருஷ்ணகிரி, தூத்துக்குடி, நாமக்கல் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் தற்போது கொரோனா முற்றிலும் இல்லை.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…