கொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்து தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி, ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்கள் முழுவதுமாக விடுபட்டுள்ளது.
தமிழகத்தில், 3023 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கிருஷ்ணகிரியை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.தற்பொழுது தமிழகத்தில் 3 மாவட்டங்கள் கொரோனா இல்லாத மாவட்டங்களாக மாறியுள்ளது. ஈரோட்டில் 70 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதில் ஒருவர் மட்டும் உயிரிழந்த நிலையில் 69 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் அம்மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது.
நீலகிரியில் 9 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அதில் அனைவரும் நலமுடன் வீடு திரும்பியுள்ளனர். அது போல தூத்துக்குடியில் 27 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு, ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்ற 26 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். எனவே, தூத்துக்குடியும் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது.
இம்மூன்று மாவட்டங்களும் பாதிப்புக்கு பின்பு மீண்டவை. ஆனால், கிருஷ்ணகிரி மாவட்டம் இதுவரை ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லாமல், சுகாதாரமான மாவட்டமாக உள்ளது. இதன் படி தமிழகத்தில், கிருஷ்ணகிரி, தூத்துக்குடி, நாமக்கல் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் தற்போது கொரோனா முற்றிலும் இல்லை.
ஈரோடு : கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கோவையில் அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மூன்று மாவட்ட…
அகமதாபாத் : இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி ஏற்கனவே, 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்ட நிலையில்,…
சென்னை : இயக்குநர் கெளதம் தினானுரி இயக்கத்தில் உருவாகியுள்ள விஜய் தேவரகொண்டாவின் புதிய படத்திற்கு ‘கிங்டம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.…
கலிபோர்னியா : சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது…
கொழும்பு : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி, இரண்டு டெஸ்ட் மற்றும் இரண்டு ஒரு நாள் தொடரில் விளையாடி…
சென்னை : விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதன் உட்கட்டமைப்பை மறுசீரமைக்கும்…