தமிழகத்திற்கு தேவையான 4.20 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் புனேவில் இருந்து விமானம் மூலம் இன்று சென்னை வந்து சேர்ந்தன.
தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு தளர்வுகளற்ற ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.மேலும்,மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.முதலில் தடுப்பூசி போடுவது குறித்து பொதுமக்களிடம் தயக்கம் இருந்த நிலையில் பின்னர் ஏற்படுத்திய விழிப்புணர்வு காரணமாக தற்போது பலர் தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நேற்று சுகாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது, ஜூன் மாதத்துக்கான முதல் தவணை தடுப்பூசி எப்போது அனுப்பப்படும் என்பது ஜூன் 6-ஆம் தேதிக்கு பிறகே தெரியும்.தற்போது, 4.93 லட்சம் தடுப்பூசிகள் கையில் உள்ள நிலையில் அவை நாளையுடன் தீர்ந்து விடும் இதன்காரணமாக ஜூன் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தப்படாது என தெரிவித்தார்.
இதனையடுத்து,தமிழகத்திற்கு 4,20,570 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் சென்னை வருகிறது என சுகாதாரத்துறை தரப்பில் இன்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி,தற்போது 4,20,570 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் புனேவில் இருந்து விமானம் மூலமாக சென்னைக்கு வந்துள்ளன.எனவே,கொரோனா தடுப்பூசிகளை உடனடியாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால்,தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப்படாது என எதிர்பாக்கப்படுகிறது.
துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…
சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…
சென்னை : தனுஷின் 'துள்ளுவதோ இளமை', தாஸ், என்றென்றும் புன்னகை போன்ற பல படங்களிலும், பல முன்னணி விளம்பரங்களிலும் நடித்துள்ள…
சென்னை : காலையில் குறைந்த தங்கத்தின் விலை மதியம் உயர்ந்துள்ளது. காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்த நிலையில் 3…
சென்னை : மும்மொழி கொள்கை விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில், மூன்றாவது மொழி ஏதேனும் என குறிப்பிட்டு மத்திய…