ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் 4 ஆண்டுகளாக சேமித்து வைத்திருந்த ரூ.8000 பணத்தை கேரள வெள்ள நிவாரணத்திற்காகக் கொடுக்க முன்வந்த விழுப்புரம் சிறுமிக்கு இலவசமாக சைக்கிளை பரிசளிக்க முடிவு செய்தது.
அனுப்பிரியா என்ற குழந்தை விழுப்புரம் கே.கே.ரோடு பகுதியைச் சேர்ந்தவர். சைக்கிள் வாங்குவதற்காக உண்டியல்களில் பணம் சேர்த்து வந்தார்.அனுப்பிரியா 4 ஆண்டுகளாக பணம் சேமித்து வந்த நிலையில் ,வரும் அக்டோபர் 16ஆம் தேதியன்று தமது பிறந்தநாளைக் கொண்டாடும் வேளையில், சைக்கிள் வாங்க முடிவு செய்திருந்தார்.
ஆனால் கேரளா வெள்ளம் குறித்து தொலைக்காட்சி மூலம் அறிந்த சிறுமி, தான் சேமித்த பணத்தை நிவாரண நிதியாக வழங்க விரும்புவதாக தந்தையிடம் ஆசையை தெரிவித்தார். இதை அடுத்து உண்டியல்களில் இருந்த ரூ.8000 பணத்தை சிறுமி தனது தந்தையிடம் ஒப்படைத்தார். வங்கி வரைவோலை மூலம் பணத்தை அனுப்ப சிவசண்முகம் முடிவு செய்துள்ளார்.
இந்நிலையில் ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக மேலாளருமான பங்கஜ் முன்ஜல் சிறுமி அனுப்பிரியாவுக்கு வாழ்நாள் முழுவதும் ஆண்டுதோறும் ஒரு புதிய சைக்கிள் பரிசளிக்கப்படும் என்று ட்விட்டர் மூலம் அறிவித்தார்.
தற்போது அனுப்பிரியாவை பாராட்டி ஹீரோ நிறுவனம் சைக்கிளை வழங்கியுள்ளனர்.
DINASUVADU
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…