மொத்தம் எத்தனை ஆசிரியர்களுக்கு சிறந்த ஆசிரியருக்கான தமிழக அரசு விருதுகள்?!

Published by
மணிகண்டன்

நாளை செப்டம்பர் 5ஆம் தேதி இந்தியா முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. சுதந்திர இந்தியாவின் 2வது குடியரசு தலைவராக இருந்தவர் டாக்டர் ராதாகிருஷ்ணன். கல்வியாளரும், தத்தத்துவவியலாளருமான இவரது பிறந்த நாளைத்தான் 1962 முதல் ஆசிரியர் தினமாக நாம் கொண்டாடி வருகிறோம்.

இந்த ஆசிரியர் தினத்தின் போது சிறந்த ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அரசு விருது வழங்கி கௌரவிப்பது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு விழா நாளை மதியம் 2 மணி அளவில் சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வைத்து இந்த விருது விழா நடைபெற உள்ளது.

இந்த விழாவில் தமிழக அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார் பாடநூல் கழக தலைவர் வளர்மதி மற்றும் பல கல்வியாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இதில் அரசு தொடக்க பள்ளி ஆசிரியர்கள் 165 பேருக்கும், அரசு உயர்நிலை பள்ளி ஆசிரியர்கள் 165 பேருக்கும், மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் 32 பேருக்கும், மாற்று திறனாளி ஆசிரியர்கள் 3 பேருக்கும், ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன கல்வி நிறுவன பேராசியர்கள் 10 பேருக்கும் என மொத்தமாக 377 ஆசிரியர்களுக்கு சிறந்த ஆசிரியருக்கான விருது வழங்கப்பட உள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

KKRvsDC : வெற்றிப்பாதைக்கு திரும்புமா டெல்லி? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!

டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…

36 minutes ago

நடராஜனுக்கு வாய்ப்பு கொடுக்காதது ஏன்? மனம் திறந்த கெவின் பீட்டர்சன்!

டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் ரசிகர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று என்னவென்றால்,…

2 hours ago

“நாம் நமக்குள் சண்டையிடாமல் ஒற்றுமையாக இருப்போம்!” அஜித்குமார் வேண்டுகோள்!

டெல்லி : நடிப்பு , கார் பந்தயம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கி மத்திய…

2 hours ago

கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!

ஒட்டாவா : 343 தொகுதிகளை கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அமெரிக்காவை போலவே கனடாவிலும் தேர்தல் வாக்கெடுப்பு…

3 hours ago

2026ல் அதிமுகவுக்கு 6 இடங்கள் கூட கிடைக்காது -ஆர்.எஸ்.பாரதி காட்டம்!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது…

3 hours ago

சீனா: உணவகத்தில் பயங்கர தீ விபத்து…22 பேர் பலி!

லியோனிங் : ஏப்ரல் 29 அன்று, சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள லியோயாங் நகரின் பைடா மாவட்டத்தில் (Baita District)…

3 hours ago