37 வயதாகியும் திருமணம் ஆகாமல் இருந்து வந்த நபர்!17 வயது சிறுமியை திருமணம் செய்து வைத்த தாய்!பின்னர் நடந்த விபரீதம்!

Published by
Sulai
  • தனது வயதான மகனுக்கு 17 வயது சிறுமியை திருமணம் செய்து வைத்த தாய்.சிறுமி அளித்த புகார்.
  • மகன் உட்பட நாலுபேர் கைது.தலைமறைவான தாயிற்கு வலைவீச்சு.

கரூர் மாவட்டத்தில் வசித்து வந்தவர் ஜெயலட்சுமணன் ஆவார்.இவருக்கு இவரின் பெற்றோர் திருமணம் செய்து வைக்க எண்ணியுள்ளனர்.ஆனால் அவருக்கோ வயது தொடர்ந்து ஏறிக்கொண்டே இருந்துள்ளது.

மேலும் அவருக்கு வயது அதிகம் ஆகிவிட்டதால் பலரும் பெண் தர மறுத்துள்ளனர். இந்நிலையில் எப்படியாவது திருமணம் செய்து வைக்க விரும்பிய ஜெயலட்சுமணனின் தாயார் நல்லம்மாள் 17 வயது சிறுமியின் பெற்றோரிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

பின்னர் அந்த சிறுமியின் பெற்றோரின் மனதை மாற்றிய நல்லம்மாள் தனது 37 வயது மகனுக்கும் அந்த சிறுமிக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார்.இந்நிலையில் திருமணமாகி ஆறு மாதங்களாக ஜெயலட்சுமணன் சிறுமியுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் 17 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்துவிட்டதாக ஊர்மக்களில் சிலர் குழந்தை நல அமைப்பில் புகார் அளித்துள்ளனர்.மேலும் அந்த சிறுமியும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஜெயலட்சுமணன் உட்பட நாலு பேரை கைது செய்துள்ளனர்.மேலும் தலைமறைவான ஜெயலட்சுமணனின் தாயார் நல்லம்மாவை தேடிவருகின்றன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

சீமான் விவகாரம் : இதுதான் கடைசி? “எனக்கு எந்த நியாயமும் கிடைக்கல.,”  விஜயலட்சுமி பரபரப்பு! 

சீமான் விவகாரம் : இதுதான் கடைசி? “எனக்கு எந்த நியாயமும் கிடைக்கல.,”  விஜயலட்சுமி பரபரப்பு!

சென்னை : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் குற்றசாட்டை முன்வைத்து புகார் அளித்து…

3 minutes ago

2026-ல் விஜய் ஆட்சி என்பது பகல் கனவு! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!

சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி வருகின்ற 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக…

48 minutes ago

இனிமே உங்களுக்கு கிடையாது! உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை நிறுத்திய அமெரிக்கா!

அமெரிக்கா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராத ஒரு போராக இருந்து வருகிறது. இதன் காரணமாக…

2 hours ago

Live : சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி முதல்.., மும்மொழி கொள்கை விவகாரம் வரையில்…

சென்னை : இன்று சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டி துபாயில் நடைபெறுகிறது. இதில் ரோஹித் சர்மா…

3 hours ago

2011-க்கு பிறகு..? பழிதீர்க்குமா இந்தியா? அசுர பலத்துடன் காத்திருக்கும் ஆஸ்திரேலியா!

துபாய் : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரையிறுதி இன்று துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல்…

3 hours ago

“சீக்கிரமா குழந்தைகள் பெத்துக்கோங்க..,” மீண்டும் ‘அதனை’ குறிப்பிட்டு பேசிய முதலமைச்சர்!

நாகை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நாகப்பட்டினத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இப்பயணத்தில் நாகை மாவட்டத்தில் முடிவுற்ற திட்டங்கள் தொடங்கி…

4 hours ago