தமிழகத்தில் புதியதாக 360 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் புதியதாக 360 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார். கூடுதலாக 2,400 ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படும். கொரோனா கவனிப்பு மையங்களில் 9,503 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளனர்.
பதட்டத்தை தவிர்த்து ஆக்கபூர்வமாகச் சிந்தித்து அரசுடன் ஒத்துழைக்க வேண்டும். தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் போதிய படுக்கை வசதிகள் உள்ளன. மக்கள் பதட்டமடைய வேண்டாம். அரசு மருத்துவமனைகளில் உள்ள வரம்பை தாண்டாமல் இருக்க பொதுமக்கள் தடுப்பு முறைகளை பின்பற்ற வேண்டும். செவிலியர்கள், மருத்துவர்கள் கூடுதல் பணிசுமையுடன் பணியாற்றி வருகின்றனர்.
போலீசார், சுகாதாரத்துறையினர், துப்புரவு பணியாளர்களும் அதிக சுமையுடன் பலமணிநேரம் பணியாற்றுகின்றன. லேசான அறிகுறிகள் பாதிப்புள்ள நோயாளிகள் அரசு மருத்துவமனைகளில் முற்றுகையிடுவதை தவிர்க்க வேண்டும். ஆக்சிஜன் படுக்கை வசதிகளை புதிய தொற்றுகளுடன் வரும் நோயாளிகளுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும் இந்த…
காசா : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஹமாஸ் அமைப்புக்கு எச்சரிக்கை விடுத்து பேசியியிருந்த நிலையில், மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் என…
சென்னை : அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் நடத்திய விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி சென்னை…
பாரிஸ் : பிரதமர் நரேந்திர மோடி 3 நாட்கள் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ளார். அங்கு பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மேக்ரான்…
குவாத்தமாலா : மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான குவாத்தமாலாவில் பிப்ரவரி 10 காலை உள்ளூர் பேருந்து சாலை பக்கவாட்டில் உள்ள…
மும்பை : வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும்…