அலங்காநல்லூர் அருகே இளைஞருக்கு கத்திக்குத்து.. 34 ஆயிரம் ருபாய் வழிப்பறி!

Default Image

மதுரை, அலங்காநல்லூரில் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞரை வழிமறைத்து, அவரை கத்தியால் குத்திஅவரிடமிருந்த 34 ஆயிர ரூபாய் பணம் மற்றும் வாகனத்தை வழிப்பறி செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மதுரை மாவட்டம், பாலமேடு பகுதியை சேர்ந்தவர் நேசபாலன். இவர் வேலை முடிந்ததும் நேற்று இரவு அலங்காநல்லூர் சாலை உள்ள சிக்கந்தர்சாவடி அருகே சென்றுகொண்டிருந்தார். அப்பொழுது அவரை வழிமறைத்த 4 பேர் கொண்ட கும்பல், அவரை கத்தியால் குத்திவிட்டு, அவரிடமிருந்த 34,000 ரூபாய் பணம் மற்றும் அவரின் வாகனத்தை வழிப்பறி செய்து அங்கிருந்து தப்பியோடினர்.

இந்நிலையில், ரத்த காயங்களுடன் சாலையில் நடமாடி கொண்டிருந்த அவரை அங்குள்ள பொதுமக்கள் மீட்டு, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்தச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அந்த கும்பலை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live - 18042025
sivakumar about Suriya
TVK Leader Vijay Speech
virender sehwag virat kohli Rajat Patidar
TVK Meeting
upi gst over 2000
Actor Bobby Simha car accident