#Breaking:ஆவினில் முறைகேடு – 34 அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம்..!

Published by
Edison

ஆவின் நிறுவனத்தில் முறைகேடு காரணமாக அந்நிறுவன 34 தலைமை அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆட்சியில் ஆவின் நிறுவனத்தில் ஏராளமான முறைகேடு நடந்துள்ளதாக ஏற்பட்ட புகார் எழுந்தது.மேலும்,முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் உயர்பதவியில் அமர்த்தப்பட்டு முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக தற்போதைய பால்வளத்துறை அமைச்சர் நாசர் அவர்களிடம் பால் முகவர்கள் புகார் அளித்தனர்.

இதனால்,ராஜேந்திர பாலாஜி மீதான முறைகேடுகள் குறித்து விசாரணை அறிக்கை தயார் ஆகி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,ஆவினில் முறைகேடு காரணமாக அந்நிறுவனத்தின் 34 தலைமை அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி,

  • சந்தை பிரிவு பொதுமேலாளர் ரமேஷ் குமார் – விழுப்புரம் ஜி.எம் ஆக மாற்றப்பட்டுள்ளார்.
  • முன்னதாக விழுப்புரம் ஜி.எம் ஆக இருந்த புகழேந்தி – சந்தை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
  • நிதிப் பிரிவு துணைப் பொது மேலாளர் – முத்துக் குமரன் உள்ளிட்ட 34 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும்,இதுகுறித்து அமைச்சர் நாசர் அவர்கள் கூறுகையில்:”முதல்வர் ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் நிர்வாகம் திறம்பட செயல்பட வேண்டியதன் காரணமாக ஆவின் உற்பத்தியைக் கூட்டவும்,அதே நேரத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மக்களை சென்றடைய வேண்டிய உணர்வின் அடிப்படையில் அதிகாரிகள் இடம் மாற்றப்பட்டுள்ளனர்.

கடந்த ஆட்சியை விட தற்போதைய ஆட்சியில் 1.30 லட்சம் அளவிற்கு உற்பத்தியை அதிகரித்துள்ளோம்.அந்த வகையில்,அதிகாரிகளின் இடமாற்றத்தின் மூலம்  உற்பத்தியை மேலும் அதிகரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.நிர்வாக வசதிக்காக அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்”,என்று தெரிவித்தார்.

Published by
Edison

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

12 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

12 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

13 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

13 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

13 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

13 hours ago