சென்னையில் வெளிநாட்டிலிருந்து வந்த 32 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்!

Default Image

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் மிக தீவிரமாக இருப்பதால், இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், வரும் ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இருந்தால் தான், நாம் இந்த கொரோனா வைரஸை விரட்டி அடிக்க முடியும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார். 

இந்நிலையில், வெளிநாட்டிலிருந்தோ அல்லது வெளி மாநிலங்களில் இருந்தோ வருபவர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். அந்த வகையில், சென்னை ஆவடியில் வெளிநாட்டிலிருந்து வந்த 32 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீடுகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர். இதன் மூலம் மற்ற மக்கள் விழிப்புடன் செயல்பட உதவியாக இருக்கும். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்