3,00,000 ரூபாய் செலவு செய்து 57,74,000 ரூபாய் பெற்ற நோயாளியின் குடும்பதினர்..!!

Published by
Dinasuvadu desk

சிகிச்சையின் போது மரணம் அடைந்த நோயாளியின் குடும்பத்திற்கு 57 லட்சத்து 74 ஆயிரம் இழப்பீடு – அப்பலோ மருத்துவமனைக்கு உத்தரவு

கடந்த 2003-ஆம் ஆண்டு ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அபானிகுமார் என்பவர்  மூல நோய் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் .அப்போது அபானிகுமாரை பார்க்க பெற்றோருக்கு அனுமதி மறுத்த மருத்துவர்கள் வென்டிலேட்டரில் வைத்திருப்பதாகவும், மயக்க மருந்து கொடுத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அவருக்கு திடீர் மாரடைப்பு மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக மயக்கவியல் நிபுணரும், அறுவை சிகிச்சை நிபுணரும் தெரிவித்த நிலையில் பின்னர் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. 15 நாட்கள் சிகிச்சைக் கட்டணமாக 3 லட்சம் ரூபாயும் வசூலிக்கப்பட்டது.

இது தொடர்பாக அபானி குமாரின் பெற்றோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் மன்ற நீதிபதிகள் அபானிகுமாருக்கு எப்பொழுது மாரடைப்பு ஏற்பட்டது, என்ன சிகிச்சை வழங்கப்பட்டது, மயக்க மருந்து ஏன் கொடுக்கபட்டது என்பது தொடர்பான விவரங்களை அப்போலோ மருத்துவமனை முழுமையாக வழங்க தவறிவிட்டதாகத் தெரிவித்தனர். அவரது மரணத்துக்கு மருத்துவமனையும் மருத்துவர்களுமே காரணம் என்று கூறிய நீதிபதிகள் அபானி குமாரின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக 44 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட்டனர்.

பெற்றோர்களின் மன உளைச்சலுக்காக 10 லட்சம் ரூபாய், அவர்கள் செலுத்திய 3 லட்ச ரூபாய், வழக்குச் செலவுக்காக10 ஆயிரம் ரூபாயையும் சேர்த்து 57 லட்சத்து 74 ஆயிரம் ரூபாயை வழக்கு தொடர்ந்த நாளில் இருந்து 6 சதவீத வட்டியுடன் 4 வாரத்தில் வழங்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

DINASUVADU 

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

9 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

11 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

11 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

11 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

11 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

12 hours ago