அரசு தகுதி தேர்வில் வெற்றிபெற்றும் வேலை வேண்டும்.! சென்னையில் 300 பேர் உண்ணாவிரதம்.!

Published by
மணிகண்டன்

கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 4 முறை நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் சுமார் 30 ஆயிரம் பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர். இவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட வேண்டும் என சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 300 பேர் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

தமிழகத்தில் B.Ed முடித்தவர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு எனும் TET தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வு கடந்த 2014ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு வரையில் 4 முறை இந்த தேர்வு நடைபெற்று முடிந்துள்ளது.

 ஆனால், இதுவரையில் அரசு பணி நியமன ஆணை வழங்கவில்லை என கூறி, மறு நியமன தேர்வை ரத்து செய்ய கோரியும், சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் இன்று சுமார் 300க்கும் அதிகமான TET தேர்வில் வெற்றி பெற்றவர்கள்அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

கடந்த 4 முறை நடந்த தேர்வில் சுமார் 30,000க்கும் அதிகமானோர் தேர்ச்சிபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக அரசு தங்களது தேர்தல் அறிக்கையில் இதனையும் குறிப்பிட்டுள்ளதால் முதல்வர் மு.க.ஸ்டாலின் தயவு கூர்ந்து இந்த கோரிக்கையை நிறைவேற்றி தருமாறு கேட்டு வருகின்றனர்.

Recent Posts

பருப்பு விவகாரம்., “பாஜகவின் ஆதாரமற்ற குற்றசாட்டு.!” தமிழக அரசு வெளியிட்ட விளக்க அறிக்கை..,

பருப்பு விவகாரம்., “பாஜகவின் ஆதாரமற்ற குற்றசாட்டு.!” தமிழக அரசு வெளியிட்ட விளக்க அறிக்கை..,

சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…

22 mins ago

IND vs NZ : ‘ஒரு கேப்டனாக வேதனை அடைந்தேன்’.. ரோஹித் சர்மா பேச்சு!

பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…

1 hour ago

‘நவம்பர்… தமிழகத்திற்கு அதிக மழை கொண்டு வரும்’ – விளக்கம் கொடுத்த வெதர்மேன்!

சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…

2 hours ago

ஹமாஸ் தலைவர் உயிரிழப்பு : “மீதம் இருப்பவர்களையும் அழிப்போம்” – நெதென்யாகு சபதம்!

ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…

2 hours ago

காலை 10 மணி வரை இந்த 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…

2 hours ago

பை பை ஆஸி.! இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா மகளிர் அணி!

துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…

11 hours ago