தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்த 300 நாட்டுக் கோழிகள்

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், கருப்பந்துறை ஆற்றின் கரையோரப் பகுதியில் உள்ள கோழிப் பண்ணைக்குள் நீர் புகுந்ததால் 300 நாட்டுக்கோழிகள் உயிரிழப்பு.
கடந்த சில தினங்களாக நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நெல்லையில் உள்ள பிரதான அணைகள் நிரம்பி உபரி நீர் அதிக அளவில் வெளியேற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் தாமிரபரணி ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், கருப்பந்துறை ஆற்றின் கரையோரப் பகுதியில் உள்ள கோழிப் பண்ணைக்குள் நீர் புகுந்துள்ளது. இதனால் அங்கிருந்த 300க்கும் மேற்பட்ட நாட்டு கோழிகள் மற்றும் கோழி குஞ்சுகள் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தனர். மீதமுள்ள கோழிகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்தி உள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025
“விருப்பமில்லாமல் செய்தால் தான் அது பாலியல் வன்கொடுமை” சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு!
February 28, 2025