30% நிதி.. பேரு மட்டும் ‘பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா’.! அமைச்சர் கடும் விமர்சனம்.!

Published by
மணிகண்டன்

தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் கடைசி நாள் நடைபெற்றது. இன்றைய நாளில் 2024-25ஆம் ஆண்டு தமிழக பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் மீது நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கும் நிதி தமிழக அரசு திட்டங்கள் குறித்து பல்வேறு தகவல்களை குறிப்பிட்டார்.

மதுரை எய்ம்ஸ்… கோவை நூலகம்.! சட்டப்பேரவையில் முதல்வர் கூறிய முக்கிய தேதி.!

வீடுகட்ட 1.2 லட்சம் :

அவர் கூறுகையில், மத்திய அரசு திட்டங்களை தமிழக அரசு செயற்படுத்தி வருவதாக சில உறுப்பினர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால், அதன் உண்மை தன்மையை ஆராய்ந்து பார்த்தால் அவற்றில் பெரும்பாலும் தமிழக அரசு தான் நிதியை ஒதுக்கி வருகிறது. மத்திய அரசின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கிராமங்களில் வீடு கட்டுவதற்கு 1.2 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மாநில அரசு 48 ஆயிரம் ரூபாயும் மத்திய அரசின் 72 ஆயிரம் ரூபாயும் வழங்க வேண்டும்.

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா :

ஆனால், இந்த தொகை வீடு கட்டுவதற்கு போதாது என்பதால், மாநில அரசு கூடுதலாக 1.2 லட்சம் தருகிறது. அப்படி பார்த்தால், மொத்தம் உள்ள 2.4 லட்சம் ரூபாயில் மத்திய அரசு 72,000 மட்டுமே தெரிகிறது. தமிழக அரசி 1.68 லட்சம் ரூபாய் தருகிறது. ஆக 30 சதவீதம் மட்டுமே மத்திய அரசு நிதி தருகிறது. ஆனால் பெயர் மட்டும் ” பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா” பேரு மட்டும் பெரிசாக இருக்கிறது ஆனால் நிதி குறைவாக இருக்கிறது.

கலைஞரின் கனவு இல்லம் :

மேலும், ஆதிதிராவிடருக்கு கான்கிரீட் வீடு வழங்கியது கலைஞர் ஆட்சி காலத்தில் தான். 1970ஆம் ஆண்டிலேயே குடிசை மாற்று வாரியம், திமுக ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்டது. 2010ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சி காலத்தில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது, அவை 14 ஆண்டுகளுக்கு பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி காலத்தில் “கலைஞரின் கனவு இல்லம்” என்ற பெயரில் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் கீழ் ஒரு வீடு கட்டுவதற்கு 3.5 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு அதற்காக 2000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கிராம சாலை திட்டம் :

அதேபோல் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் நகர்புறங்களில் வீடு கட்டுவதற்கு 1.5 லட்சம் ரூபாய் மத்திய அரசு கொடுக்கிறது. 7 லட்சம் ரூபாயை மத்திய அரசு கொடுக்கிறது. தமிழக அரசின் கிராம சாலை திட்டமானது தமிழக அரசின் முழு செலவின் கீழ் செயல்படுத்தப்பட்ட வருகிறது. ஆனால் மத்திய அரசு அறிவித்த பிரதம மந்திரி கிராம சாலை திட்டம் தெற்கு 1945 கோடி ரூபாய் வரைவு செய்யப்பட்டு மத்தியரசுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், தற்போது வரை ஒரு ரூபாய் கூட அவர்கள் ஒதுக்கவில்லை என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சட்டமன்றத்தில் தெரிவித்தார்.

 

Recent Posts

இதான்யா தவெக மாநாடு.. தேதியை குறித்த தொண்டர்கள்!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்.15ஆம் தேதி நடைபெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டிற்கான…

8 hours ago

“சுங்கச்சாவடி கட்டணம் வழிப்பறி” தமிழ்நாடு முழுக்க ம.ம.க முற்றுகை போராட்டம்.!

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் 42 சுங்கச்சாவடியிலும், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 25 சுங்க…

8 hours ago

ஹாக்கி ஆசிய கோப்பை : இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது இந்திய அணி!

ஹுலுன்பியுர்: சீனாவில் உள்ள ஹுலுன்பியுரில் இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய…

8 hours ago

ஓடிடியில் திகில் காட்ட வருகிறது ‘டிமாண்டி காலனி 2’! ரிலீஸ் தேதி இதோ!

சென்னை : திகில் படங்களை விரும்பி பார்க்கும் பார்வையாளர்களுக்கு டிமாண்டி காலனி படம் கண்டிப்பாக பிடிக்கும் என்றே சொல்லலாம். இந்த…

8 hours ago

செல்வ வளத்தை வாரி வழங்கும் மீன் குளத்தி அம்மன் கோவில் எங்க இருக்கு தெரியுமா ?

சென்னை -மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் வரலாறு மற்றும் சிறப்புகள் வழிபாட்டு  முறைகளை இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்வோம்.…

8 hours ago

ஷூட்டிங் போன இடங்களில் பாலியல் தொல்லை.. ஜானி மாஸ்டர் மீது வழக்கு!

சென்னை : பிரபல திரைப்பட நடனக் கலைஞராக பணிபுரியும் 21 வயது இளம்பெண் ஒருவரினால் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர்…

9 hours ago