அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) அங்கீகாரம் பெற்ற 3,325 தனியார் பொறியியல் கல்லூரிகள் நாடு முழுவதும் இயங்கி வருகின்றன. அதிகபட்சமாக தமிழகத்தில் மட்டும் 526 தனியார் பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.இதில், கடந்த கல்வியாண்டில் 177 தனியார் பொறியியல் கல்லூரிகளில் 30 சதவீதத்துக்கும் குறைவான மாணவர்களே சேர்ந்துள்ளனர் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி, திறமையான ஆசிரியர்கள், சரியான கட்டமைப்பு வசதிகள் இல்லாத தரம் குறைந்த கல்லூரிகளில்தான் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.அவ்வாறு தரம் குறைந்த கல்லூரிகள் மாணவர்களின் வாழ்க்கையை பாழாக்கி வருகின்றன. இதற்கு தமிழக அரசும், அண்ணா பல்கலைக்கழகமும்தான் பொறுப்பேற்க வேண்டும். மாணவர்களின் நலன் கருதி 20 சதவீதத்துக்கும் குறைவான மாணவர் சேர்க்கை உள்ள பொறியியல் கல்லூரிகளை மூட உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…