உடல் அடக்கத்தை தடுத்தால் 3 ஆண்டுகள் சிறை.! – தமிழக அரசு அறிவிப்பு.!

Default Image

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் உடலை அடக்கம் செய்யவிடாமல் தடுத்தால், அவர்களுக்கு குறைந்தது ஓராண்டு சிறை தண்டனை முதல் 3 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை வழங்கப்படும் – தமிழக அரசு.

சில தினங்களுக்கு முன்னர் கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர் சைமன் உடலை கீழ்பாக்கம் பகுதியில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்ய முற்பட்டபோது, அப்பகுதி மக்கள் போராட்டம் செய்ததை அடுத்து அவரது உடல் வேறு இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

அடக்கம் செய்ய மறுத்து போராட்டத்தில் ஈடுப்பட்டதாக 40க்கும் மேற்பட்டோர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். கொரோனாவால் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய மறுப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியது பலவேறு எதிர்ப்புகளை சந்தித்தது.

இதனை அடுத்து, தற்போது தமிழக அரசு , அவரச சட்டத்தை இயற்றியுள்ளது. அதன்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் உடலை அடக்கம் செய்யவிடாமல் தடுத்தால், அவர்களுக்கு குறைந்தது ஓராண்டு சிறை தண்டனை முதல் 3 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

TN Assembly -Ajith Kumar
TNGovt - mathiazhagan mla
RR player Vaibhav Suryavanshi
meenakshi amman temple
CM MK Stalin say an important announcement about Colony word
Tamilnadu CM MK Stalin speech in TN Assembly
Pakistan - Kashmir